பா.ஜ.க. ஆளும் ஒடிசாவில் கொடூரம் பழங்குடியின பெண் வாயில் மலத்தை திணித்து தாக்குதல்!

Viduthalai
2 Min Read

புவனேசுவர், நவ.23 பா.ஜ.க. ஆளும் ஒடிசாவில் பழங்குடியின பெண் வாயில் மலத்தை திணித்து தாக்கு தல் நடத்தியது அதிர்ச்சியை ஏற்படுத்தி யுள்ளது.
நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் ஒடிசா மாநிலத்தில் முதன்முறையாக பா.ஜ.க. ஆட்சியைக் கைப்பற்றியது. முதலமைச்சராக பழங்குடியினத்தைச் சேர்ந்த மோகன் சரண் மாஜி உள்ளார். ஒடிசாவில் பழங்குடியினரின் நலனுக்காக மோகன் சரண் முதலமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார் என பிரதமர் மோடி உள்ளிட்ட பா.ஜ.க.வினர் பெருமை பேசினர்.

ஆனால் ஒடிசாவில் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்த பின்பு முன்னெப்போதும் இல்லாத வகையில் பழங்குடியினருக்கு எதிரான வன்முறைகள் மிக மோசமான அளவில் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், ஒடிசாவின் லங்கீர் மாவட்டத்தில் உள்ள ஜுராபந்த் எனும் கிராமத்தில் அபய் பக் எனும் வேறு சமூகத்தைச் சேர்ந்த நபர், பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த இளம் பெண்ணுக்குச் சொந்தமான வயலில் டிராக்டரை ஓட்டி பயிர்களை நாசம் செய்து இருக்கிறார்.
இதைக் கண்டித்தும், அபய் பக் மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும் இளம்பெண்ணும், அவரது உறவி னர்க ளும் ஜுராபந்த் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இத்தகைய சூழலில் நவ.19ஆம் தேதி அன்று வயலை நாசப்படுத்திய ஜாதி வெறிக் குண்டர்களைக் கண்டித்து போராட்டம் நடத்திய இளம்பெண் குளத்தில் குளித்துவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்பொழுது அபய் பக் இளம்பெண்மீது தாக்குதல் நடத்தி, மானபங்கம் செய்தது மட்டுமல்லாமல் ஆபாசமான வார்த்தைகளால் ஜாதிய ரீதியாக திட்டியிருக்கிறார்.

தனது மகளை மீட்க வந்த இளம்பெண்ணின் தாயின் கழுத்தை பிடித்து நெரித்து அபய் பக் தாக்குதல் நடத்தியுள்ளார். மேலும் மனித மலத்தை எடுத்து இளம் பெண்ணின் முகம் முழுவதும் பூசி, அவரது வாயிலும் திணித்திருக்கிறார் அபய் பக்.
இதனையடுத்து இளம்பெண் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரை பெற்றுக் கொண்ட காவல்துறையினர் விசா ரணை நடத்துவதாக மட்டுமே தெரி வித்துள்ளனர். ஆனால், இன்னமும் அபய் பக் கைது செய்யப்படவில்லை. இதனால் அபய் பக் பா.ஜ.க.விற்கு நெருக்கமானவராக இருக்கலாம் என செய்திகள் வெளியாகியுள்ளன.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *