வீர தீர செயலுக்கான அண்ணா பதக்கம் டிசம்பர் 15 வரை விண்ணப்பிக்கலாம்

Viduthalai
2 Min Read

சென்னை, நவ. 22- வீரதீரச் செயல்களுக்கான அண்ணா பதக்கம் விருது அரசுப் பணியாளர்கள், ஆசிரியர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் வழங் கப்பட்டு வருகிறது. பொதுமக்கள் 3பேருக்கும், அரசு ஊழியர்கள் 3 பேருக்கும் இந்த பதக்கங்கள் வழங்கப்படுகின்றன. அதன்படி, ரூ.1லட்சத்துக்கான காசோலை, பதக்கம் தகுதியானவர்களுக்கு வழங்கப்படுகிறது.
2025-ஆம் ஆண்டுக்கான வீரதீரச் செயல்களுக்கான அண்ணா பதக்கத்துக்கான விண்ணப்பங்களை https://awards.tn.gov.inஎன்ற இணையதளத்தில் மட்டுமே பெற முடியும். இதற்கு விண் ணப்பிக்க அடுத்த மாதம் (டிசம்பர்) 15-ஆம் தேதி கடைசி நாள் ஆகும்.
தேர்வு செய்யப்படும் தகுதியானவர்களுக்கு குடியரசு தின விழாவின் போது முதலமைச்சர் வீரதீர செயலுக்கான அண்ணா பதக்கத்தை வழங்குவார்.

பிணைத் தொகை செலுத்த முடியாததால்
சிறையில் இருந்து வெளிவர முடியாத கைதிகள்

இந்தியா
புதுடில்லி, நவ.22- பிணை கிடைத்தும், பிணைக்கானத் தொகை செலுத்த முடி யாததால், சிறையில் இருந்து வெளியே வர முடியாத நிலையில் கைதிகள் சிலர் இருப்பதாக உச்சநீதிமன்றம் கவலை தெரிவித்துள்ளது.
கடந்த 2021-ஆம் ஆண்டு, ‘பிணை அளிப்பதற்கான கொள்கை வியூகம்’ என்ற தலைப்பில், உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து ஒருவழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்டது. கடந்த மாதம் நடந்த விசாரணையின் போது, தண்டனை கைதிகளுக்கு நிரந்தரமாக தண் டனை குறைப்பு அளிப்பது தொடர்பாக உச்ச நீதி மன்றம் பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்தது. இந்நிலை யில், நிலுவையில் உள்ள இவ்வழக்கு, நீதிபதிகள் அபய் எஸ். ஓகா, அகஸ்டின் ஜார்ஜ் மசி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதிகள் கூறியதாவது:-
நீதிமன்றங்கள் பிணை அளித்தும், பிணைக்கானத் தொகை செலுத்த முடி யாமல், எத்தனையோ கைதிகள் சிறையில் இருந்து வெளியே வர முடியாமல் உள்ளனர். அந்த பிரச்சினையை நாம் எப்போதாவது பரிசீலித்து இருக்கிறோமா? இந்த கோணத்தில் மனுதாரரின் வழக்குரைஞர் அணுக வேண்டும். மின்னணு சிறை தகவல் தொகுப்பில் உள்ள தகவல்களை வைத்து, அத்தகைய கைதிகளை அடையாளம் காணலாம். அது, இவ்வழக்கின் விசாரணை வரம்பை அதிகரிக்கும். இவ்வாறு நீதிபதிகள் கூறி விசாரணையை அடுத்த வாரத்துக்கு ஒத்தி வைத்தனர்.

வரும் நாடாளுமன்ற கூட்டத்தில் வக்பு மசோதா உட்பட 15 மசோதாக்களை நிறைவேற்ற திட்டமாம்
புதுடில்லி, நவ.22- நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் 25-ஆம் தேதி தொடங்குகிறது. டிசம்பர் 20-ஆம் தேதிவரை கூட்டத்தொடர் நடக்கிறது. இந்த தொடரில் 15 மசோதாக்களை நிறைவேற்ற ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளது. இவற்றில் 10 மசோதாக்கள் நிலுவையில் உள்ளவை. மக்களவையில் 8 மசோதாக்களும், மாநிலங்களவையில் 2 மசோதாக்களும் நிலுவையில் இருக்கின்றன. மீதி 5 மசோதாக்களும் புதிய மசோதாக்கள் ஆகும்.
நிலுவையில் உள்ள மசோதாக்களில் வக்பு சட்ட திருத்த மசோதா முக்கியமானது. நாடு முழுவதும் வக்பு சொத்துகளை ஒழுங்குபடுத்த கடந்த கூட்டத்தொடரில் மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. நாடாளுமன்ற கூட்டுக்குழு ஆய் வுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. கூட்டுக்குழு தனது அறிக்கையை சமர்ப்பித்தவுடன், அம்மசோதாவிவாதத்துக்கு முன்வைக்கப்பட்டு நிறைவேற்றப்படும் என்று கூறப்படுகிறது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *