குஜராத்தில் போலி மருத்துவர்கள் இணைந்து புதிய மருத்துவமனையாம்!

1 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

காந்திநகர், நவ.22 குஜராத் மாநிலம் சூரத்தில் உள்ள பண்டசேரா பகுதியில் நேற்று முன்தினம் ‘ஜன்சேவா பல்நோக்கு மருத்துவமனை’ என்ற பெயரில் புதிய மருத்துவமனை ஒன்று திறக்கப்பட்டது. முன்னதாக திறப்பு விழாவை முன்னிட்டு, அப்பகுதியில் உள்ள மக்களுக்கு அழைப்பிதழ்கள் வழங்கப்பட்டிருந்தன. அதில் சூரத் ஆணையர் உள்பட பல்வேறு மூத்த காவல்துறை அதிகாரிகள் திறப்பு விழாவில் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொள்ள உள்ளதாக குறிப் பிடப்பட்டிருந்தது.

ஆனால் திறப்பு விழாவில் காவல் துறை அதிகாரிகள் யாரும் பங்கேற்கவில்லை. இதற்கிடையில் மருத்துவமனையின் திறப்பு விழா குறித்த தகவல் காவல் துறையினரை எட்டியது. அழைப்பிதழில் குறிப்பிடப்பட்டிருந்த காவல்துறை அதிகாரிகளுக்கு இது குறித்து எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை என்பது தெரியவந்தது.

இதையடுத்து களத்தில் இறங்கிய காவல்துறையினர், சம்பந்தப்பட்ட மருத்துவமனைக்கு நேரில் சென்று விசாரணை நடத்தியபோது, அந்த மருத்துவமனையின் நிறுவனர்களான 5 பேரில், 3 பேர் மீது ஏற்கனவே வழக்குகள் நிலுவையில் இருப்பது கண்டறியப்பட்டது.
இதில் 2 பேர் போலி மருத்துவர்கள் என்பதையும் காவல்துறையினர் கண்டறிந்தனர். இந்த நிகழ்வை தொடர்ந்து மருத்துவமனை வளாகம் மூடப்பட்டது. அதோடு அங்கிருந்த மற்ற மருத்துவர்கள் குறித்தும் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். போலி மருத்துவர்கள் இணைந்து புதிய மருத்துவமனையை திறந்த நிகழ்வு அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *