திருமண ஊர்வலத்தில் பண மழையாம் – இங்கு அல்ல உத்தரப்பிரதேசத்தில்

1 Min Read

லக்னோ, நவ.21 சமூக ஊடகங்களில் வெளியாகும் வீடி யோக்களில் சில நகைச் சுவையாகவும், சில விமர் சனத்திற்குள்ளாவதையும் காணமுடிகிறது. அந்த வகையில் தான் தற்போது சமூக வலைத்தளங்களில் வைர லாகும் திருமண ஊர்வலத்தின் வீடியோ ஒன்று…
வைரலாகும் வீடியோ உத்தர பிரதேச மாநிலம் சித்தார்த்நகரில் எடுக்கப்பட்டுள்ளது.

வீடியோவில், திருமண ஊர்வலத்தின் போது ரூ.100, ரூ.200 மற்றும் 500 ரூபாய் நோட்டுகளை வீசுகின்றனர். மணமகன் ஊர்வலத்தின் போது அங்கு கூடியிருந்த விருந்தினர்கள் பணத்தை வீசுகின்றனர். காற்றில் பறக்கும் ரூபாய் நோட்டுகளை அங்கு கூடியிருந்த மக்கள் எடுத்து செல்கின்றனர். இந்த வைர லான வீடியோ அப்சல் மற்றும் அர்மானின் திருமணத்திலிருந்து எடுக் கப்பட்டதாக கூறப்படுகிறது.

சமூக வலைத்தளங்களில் வைரலான வீடியோவை பார்த்த பயனர்கள் பலரும் தங்களது கருத் துகளை தெரிவித்து வருகின்றனர். அதில் ஒரு பயனரோ, “சகோதரரே, பணத்தை ஏழைகளுக்குப் பகிர்ந் தளிக்கவும்” என்றும் மற்றொருவரோ “இவ்வளவு பணம் இருந்தால், நான்கு ஏழைப் பெண்களுக்குத் திருமணம் செய்திருக்கலாம்” என்றும் கூறுகின்றனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *