கடந்த 5 ஆண்டுகளில் நாடு முழுவதும் 219 ரயில் விபத்துகள் மாநிலங்களவையில் ரயில்வே அமைச்சகம் தகவல்

1 Min Read

புதுடில்லி, ஜூலை 26 – கடந்த அய்ந்து ஆண்டுகளில் 219 ரயில் விபத்துகள் நடந்துள்ளதாக மாநி லங்களவையில் ரயில்வே அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. இதில் மிகப் பெரிய விபத்து, கடந்த ஜூனில் ஒடிசாவின் பாலஷோரில் நடந்த ரயில் விபத்து ஆகும். இந்த விபத்தில் 293க்கும் மேற்பட்ட உயிரிழந்த நிலையில், 1,000க்கும் மேற்பட்ட காயமடைந்தனர். இது தொடர்பாக மாநிலங்களவை நாடாளு மன்ற உறுப்பினர் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் வகையில் வெளியிடபட்ட அறிக்கையில்:

கடந்த 5 ஆண்டுகளில் 219 ரயில் விபத்துகள் நடந்துள்ளது. இதில் மிகப் பெரிய விபத்து, கடந்த ஜூனில் ஒடிசாவின் பால ஷோரில் நடந்த ரயில் விபத்து ஆகும்.

5 ஆண்டுகளில் நடைந் துள்ள ரயில் விபத்துகளின் முறையே 2018_-2019-ஆம் ஆண்டில் 59 ரயில் களும், 2019-_2020ஆம் ஆண்டில் 55 ரயில்களும், 2020_-2021ஆம் ஆண்டு 22 ரயில்களும், 2021_-2022-ஆம் ஆண்டில் 35 ரயில்க ளும், 2022_-2023-ஆம் ஆண்டில் 48  ரயில் களும் என மொத்தம் 219 ரயில்கள் விபத்தில் சிக்கியதாக தெரிவிக்கபட் டுள்ளது.

2004_-2014 காலப் பகுதியில் தொடருந்து விபத்துகளின் சரா சரி எண்ணிக்கை  171.7 ஆக ஆண்டுக்கு இருந்தது. ஆனால், 2014_-2023க்கு இடையில், இந்த எண்ணிக்கை ஆண்டுக்கு 70.9 ஆக குறைந்துள்ளது என்று அமைச்சகம் கூறியுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *