உத்தரப்பிரதேச ஆளுநரின் பத்தாம்பசலித்தனம்!

viduthalai
2 Min Read

விமானத்தை கண்டுபிடித்தது
ரைட் சகோதரர்கள் இல்லையாம்
வேத காலத்திலேயே இருந்துள்ளதாம்

லக்னோ, நவ. 20- இன்றைய வேகமான உலகில், ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு விரைவாக செல்வதையே பலரும் விரும்புகி றார்கள். நடுத்தர வர்க்கத்தை தாண்டியவர்களின் பய ணத் தேர்வு விமானம்தான்.

சிறியரக விமானம் முதல் மாபெரும் சொகுசு விமானங்கள் வரை உள்ளன. இந்த விமானங்களை கண்டு பிடித்தவர்கள் ரைட் சகோதரர்கள் என்று நாம் படித்து இருக்கிறோம். ஆர்வில் ரைட், வில்பர் ரைட் ஆகியோர் 1903ஆம் ஆண்டு டிசம்பர் 17ஆம் தேதி அமெரிக்காவின் வட கரோலினாவில் முதல் சுயமாக இயக்கப்படும் விமானத்தை பறக்கவிட்ட பெருமைக்குரியவர்கள்.

ஆனால் ரைட் சகோ தரர்களுக்கு முன்பே ராமாயணம், மகாபாரத புராணங்களில் புஷ்பக விமானம் பற்றிய குறிப்பு இருந்ததை சுட்டிக்காட்டி வேத காலத்திலேயே நம் நாட்டில் விமானங்கள் இருந்ததாக சிலர் கூறி வருகிறார்கள்.
அதேபோல் ஒரு கருத்தை உத்தரப்பிரதேச மாநில ஆளுநர் ஆனந்தி பென் படேலும் கூறியிருக் கிறார்.

உத்தரப்பிரதேச மாநி லம் லக்னோ மொய்னுதீக் வில் உள்ள குவாஜா மொ சிஷ்டி மொழி பல்கலைக்கழகத்தில் நடந்த பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டு அவர் பேசியதாவது,

முனிவர்களின் கண்டு பிடிப்புகள் மாணவர்கள் நம் முன்னோர்கள் செய்த இணையற்ற ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்புகளை தெரிந்து கொள்ள பழங் கால ஹிந்திய நூல்களை படிக்க வேண்டும். முனிவர்கள் மற்றும் அறிஞர்கள் குறிப்பிடத்தக்க கண்டுபிடிப் புகள் மற்றும் புதுமைகளை இன்றும் உலகிற்கு நன்மை செய்து வருகின்றனர்.

வேதகாலத்தில் இருந்த பரத்வாஜ் முனிவர் விமானத்தை பற்றி குறிப்புகளை தமது படைப்புகளில் குறிப் பிட்டுள்ளார்.
ஆனால் விமானத்தை ரைட் சகோதரர்களின் கண்டுபிடிப்பாக அங்கீ கரிக்கப்பட்டுள்ளது. நம் முன்னோர்களில் அறி வாற்றலை உலகிற்கு உணர்த்த பழங்கால இலக்கியங்களை பிற மொழிகளில் மொழி பெயர்க்க வேண்டும். புத்தரின் பூமியான ஹிந்தியா எப்போதும் அமைதியின் பாதையை விரும்புகிறது. பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் நாடு கல்வி மற்றும் ஆராய்ச்சியில் புதிய மைல்கற்களை அடைந்து வருகிறது.

– இவ்வாறு அவர் பேசினார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *