நிலச்சரிவுக்கு நிவாரணம் அளிக்காத ஒன்றிய அரசை கண்டித்து வயநாட்டில் முழு அடைப்பு

1 Min Read

வயநாடு, நவ.20- கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் முண்டக்கை, பூஞ்சிரி மட்டம், சூரல்மலை ஆகிய பகுதிகளில் கடந்த ஜூலை மாத இறுதியில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கட்டடங்கள் நிலை குலைந்தன. நிலச்சரிவு மற்றும் காட்டாற்று வெள்ளத்தில் சிக்கி 400-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

வயநாடு நிலச்சரிவை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும், நிலச்சரிவால் ஏற்பட்ட சேதத்துக்கு ஏற்ப நிவாரணம் வழங்கவேண்டும் என்று ஒன்றிய அரசிடம் கேரள அரசு அறிக்கை தாக்கல் செய்தது. ஆனால், இதுவரை நிவாரண நிதி ஒதுக்கவில்லை. இதை கண்டித்து வயநாட்டில் அய்க்கிய ஜனநாயக முன்னணி, இடது முன்னணி சார் பில் முழு அடைப்புப் போராட்டம் நேற்று (19.11.2024) நடைபெற்றது.

காங்கிரசார், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் பல்வேறு இடங்களில் சாலைகளில் சென்ற பேருந்துகள் உள்ளிட்டவாகனங்களை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். முழு அடைப்புப் போராட்டம் காரணமாக கேரளா-தமிழ்நாடு, கேரளா-கருநாடகா மாநில எல்லைகளில் பயணிகள் இறக்கி விடப்பட்டனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *