ஈரோட்டில் நடைபெறும் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழாவிற்கு வேன்கள் மூலம் சென்று பங்கேற்க தென் சென்னை மாவட்ட கலந்துரையாடல் கூட்டத்தில் முடிவு

2 Min Read

திருவல்லிக்கேணி, நவ.19- தென் சென்னை மாவட்ட கலந்துரையாடல் கூட்டம், திருவல்லிக்கேணி அய்ஸ் அவுஸ் பகுதியில் உள்ள
‘ஆர்.வி. ஆட்டோ ஒர்க்’சில் கடந்த 17.11.2024, அன்று முற்பகல் 11 மணி அளவில் மாவட்டத் தலைவர் இரா.வில்வநாதன் தலைமையில், மாவட்ட செயலாளர் செ.ர. பார்த்தசாரதி மற்றும் மாவட்டத் துணைத் தலைவர் டி.ஆர்.சேது ராமன் ஆகியோர் முன்னி லையில் நடைபெற்றது.
மாவட்ட தொழிலாளரணி தலைவர் ச.மாரியப்பன் கடவுள் மறுப்பு கூறினார்.
ஈரோடு சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா, தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் 92 ஆவது பிறந்த நாள், திருச்சி பகுத்தறிவாளர் கழக மாநாடு மற்றும் கழக பரப்புரை கூட்டங்கள் நடத்துவது குறித்தும் கலந்துரையாடப்பட்டது.

மாவட்ட துணைச் செய லாளர்கள் கோ.வீ.ராகவன், சா.தாமோதரன், எம்.ஜி.ஆர். நகர் மற்றும் கலைஞர் கருணாநிதி நகர் பொறுப்பாளர் கரு.அண்ணாமலை, திருவல்லிக்கேணி பகுதி அப்துல்லா, இராயப்பேட்டை பகுதி கோ.அரி, நொச்சிநகர் பகுதி சேது, மாவட்ட இளைஞரணி செயலாளர் ந.மணிதுரை, துணைத் தலைவர் ச.மகேந்திரன் மற்றும் துணைச் செயலாளர் இரா.மாரிமுத்து ஆகியோர் தங்களது கருத்துகளை எடுத்துரைத்தனர்.
உதயசூரியன், மா.இனியா ஆகி யோர் கலந்து கொண்டனர்.
கீழ்க்கண்ட தீர்மானங்கள் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டன.

ஈரோட்டில் நவம்பர் 26ஆம் நாள் நடைபெறவுள்ள ‘சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா’ விற்கு வேன் மூலமாகவும் பொது போக்குவரத்து மூலமாகவும் திரளாக செல்வதெனவும்,
டிசம்பர்-2 இல், சென்னை பெரியார் திடலில் நடை பெறவிருக்கும் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் 92 ஆவது பிறந்தநாள் விழாவில் திரளாக பங்கேற்று ‘பெரியார் உலகத்’திற்கு பெருமளவு நிதி வழங்குவதெனவும்,
திருச்சியில் டிசம்பர்- 28, 29 ஆகிய நாள்களில் நடைபெற உள்ள பகுத்தறிவாளர் கழக மாநாட்டில் பங்கேற்பதெனவும்,
தமிழர் தலைவர் ஆசிரியரின் 92 ஆவது பிறந்த நளையும், திருச்சி பகுத்தறிவாளர் கழக மாநாட்டையும் விளக்கி பரப்பு ரைக் கூட்டங்கள் நடத்துவது எனவும் முடிவெடுக்கப்பட்டது.
நிறைவாக அய்ஸ் அவுஸ் அன்பு நன்றி கூறினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *