மும்பை, நவ. 18- உலகெங்கும், கார் ஓட்டுவது தொடர்பாக பல வித்தியாசமான சட்டங்கள் நடைமுறையில் இருக்கின்றன. அப்படி, சில நாடுகளின் வினோத மான வாகன சட்டங்கள் பற்றி…
* ரசியாவில் அழுக்கான கார் ஓட்ட அனுமதியில்லை. அவ்வாறு, அழுக்கான காரை ஓட்டி பிடிபட்டால், இந்திய மதிப்பில் ரூ.1,724 அபராதம் செலுத்த வேண் டியிருக்கும்.
* பெரும்பாலான நாடுகளில், வாகனம் ஓட்டும்போது மது குடிப்பதற்கு அனுமதியில்லை. ஆனால் சைப்ரஸ் நாட்டில்,வாகனம் ஓட்டும்போது எந்த பானமும் குடிப்பது அல்லது சாப்பிடுவது சட்டவிரோதம். இந்த தவறை செய்து பிடிபட்டால், ரூ.7,727 அபராதம் செலுத்த வேண்டும்.
*சுவீடன் நாட்டில், வாகனங் களின் முகப்பு விளக்குகளை இரவு – பகல் எப்போதும் எரிய விட வேண்டும். அங்கு குளிர் காலத்தில், பகலில் கூட சுற்றுப்புற வெளிச்ச அளவு குறைவாக இருப்பதே இதற்கு காரணம்.
* ஜப்பான் நாட்டில் போதை யில் ஓட்டுநர் வாகனம் ஓட்டி பிடிபட்டால், அவருக்கு மட்டும் அபராதம் அல்லது சிறைத் தண்டனை விதிக்கப்படுவதில்லை, உடன் பயணிப்பவர் களுக்கும் அபராதம் விதிக்கப்படும்.
* அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தில் தேவையில்லாமல் ‘ஹாரன்’ ஒலி எழுப்புவது சட்ட விரோதமானது. அதற்கு 350 டாலர்கள் வரை அபராதம் விதிக்கப் படலாம்.
* சுவிட்சர்லாந்து நாட்டில் ஞாயிற்றுக் கிழமைகளில் காரை கையால் கழுவுவது சட்ட விரோதமானது. ஞாயிற்றுக்கிழமை, ஓய்வுநாளாகக் கருதப்படுவதே காரணம்.
* பெலாரஸ் நாட்டில், இரண்டு சக்கரங் களுக்கு மேல் உள்ள வாகனங்களில், சொந்த தீ அணைக்கும் கருவியை எடுத்துச் செல்வது கட்டாயமாகும். மேலும் காரில் முதலுதவி பெட்டி, எச்சரிக்கை முக்கோணம், காரின் வெளிப்புற விளக்குகளுக்கான உதிரி பல்புகள், முகப்பு விளக்கு மாற்றிகள், ஸ்டெப்னி போன்ற பொருட்களும் அவசியம் இருக்க வேண்டும்.
* பிலிப்பைன்சில் விரும்பிய நாளில் வாகனம் ஓட்ட முடியாது. வாகன உரிம எண் 1 அல்லது 2இல் முடிவடைந்தால், திங்கட்கிழமை அன்று வாகனம் ஓட்ட அனுமதி யில்லை.
உலகெங்கும் உள்ள வாகனச் சட்டங்கள்

Leave a Comment