கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்

1 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

18.11.2024
டெக்கான் கிரானிக்கல், சென்னை:
* அமலாக்கத்துறை, சி.பி.அய். கெடுபிடியால், டில்லி அமைச்சர் கைலாஷ் கெலாட் பதவி விலகியுள்ளார், ஆம் ஆத்மி குற்றச்சாட்டு.
* மக்கள் கொண்டாடும் திராவிட மாடல் ஆட்சி: 2026 – மீண்டும். கள ஆய்வு குறித்து தொண்டர் களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்.
* தொழிலதிபர் அதானி மட்டுமே, மோடி ஆட்சியில் பாதுகாப்பாக இருக்கிறார். விவசாயிகள், பெண்கள், இளைஞர்களுக்கு பாதுகாப்பு இல்லை, பிரியங்கா தாக்கு.
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
* மணிப்பூர் தொடர்ந்து பற்றி எரிய வேண்டும் என பாஜக நினைக்கிறது – கார்கே கண்டனம்.
* தங்கள் மக்கள் தொகைக்கு ஏற்ப உள்ளாட்சித் தேர்தலில் இட ஒதுக்கீடு அளித்திட வேண்டும், பிற்படுத்தப்பட்டோர் அமைப்புகள் தெலுங்கானா பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திடம் கோரிக்கை.
இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* மதச் சமூகத்தைப் பற்றி “தவறான கதையை” பரப்புவதாக கூறப்படும் சமூக ஊடகங்களில் பாஜக வெளியிட்ட காட்சிப்பதிவுக்கு எதிராக கூட்டணி கட்சிகளான ஜேஎம்எம் மற்றும் காங்கிரஸ் தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்ததை தொடர்ந்து எஃப்அய்ஆர் பதிவு செய்யப்பட்டது: ‘எவ்வளவு தூரம் இந்து-முஸ்லிம் என்ற பெயரில் நாட்டை வீழ்த்த அனுமதிப்பீர்கள்?’ என கேள்வி.
தி டெலிகிராப்:
* டில்லி அம்பேத்கர் பல்கலைக்கழக பேராசிரியர்கள் பணி நீக்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து டில்லி பல்கலைக்கழகம், ஜேஎன்யு, ஜாமியா ஆசிரியர்கள், மாணவர்கள் ஆர்ப்பாட்டம்.
டைம்ஸ் ஆப் இந்தியா:
* ’கிரிமிலேயர்’ கண்டறிய, அரசுப் பதவிகளுக்கு இணையான பொதுத்துறை பதவிகள் என பணியாளர் நலத் துறை அறிவித்தது, குறைபாடுகளைக் கொண்டுள்ளது. சரி செய்யப்பட வேண்டும் என ஓபிசி நாடாளுமன்ற குழு பரிந்துரைக்க முடிவு.

– குடந்தை கருணா

- Advertisement -

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *