பெரம்பலூர் மாவட்டத்திற்கு வருகை தந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு கொட்டும் மழையிலும் தி.மு.க.வினர் – பொதுமக்கள் – பெண்கள் உற்சாக வரவேற்பு! முகமலர்ச்சியுடன் உற்சாகத்தில் முதலமைச்சர்!

Viduthalai
1 Min Read

பெரம்பலூர், நவ.17- தமிழ்நாடு முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் அரியலூரில் இருந்து நிகழ்ச்சி முடிந்து பெரம்பலூர் வருகையில், திமுக துணைப் பொதுச்செயலாளரும், நீலகிரி நாடா ளுமன்ற உறுப்பினருமான ஆ.இராசா ஏற்பாட்டில், ஆலத்தூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் – ஆலத்தூர் ஒன்றிய பெருந்தலைவர் என்.கிருஷ்ணமூர்த்தி தலைமையில் மேலமாத்தூர் கிராமத்தி லும், பெரம்பலூர் மாவட்ட பொறுப்பா ளர் வீ.ஜெகதீசன், சட்டமன்ற உறுப்பி னர் எம்.பிரபாகரன் ஆகியோரது தலைமையில் குன்னம், நான்கு ரோடு, பாலக்கரை ஆகிய இடங்களில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
கொட்டும் மழையிலும் பெண்கள் ஆராவரத்துடன் வரவேற்பளித்தனர். பொதுமக்கள், பெண்கள் உற்சாக வர வேற்பில் திளைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உற்சாகத்துடன் அவர்க ளின் வரவேற்பை ஏற்றுக்கொண்டார்.
இதில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, பொதுப்பணி, நெடுஞ்சாலை மற்றும் சிறு துறை முகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு, வேளாண்மை மற்றும் உழவர் நலன்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, போக்கு வரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர், உயர்கல்வித்துறை அமைச்சர் கோ.வி.செழியன், தொழி லாளர் நலத்துறை மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வெ.கணேசன், நாடா ளுமன்ற உறுப்பினர்கள் ஆ.இராசா, கே.என்.அருண்நேரு, சட்டமன்ற உறுப்பினர் எம்.பிரபாகரன், மாவட்ட செயலாளர்கள் வீ.ஜெகதீசன், மாவட்ட ஊராட்சி குழுத் தலைவர் சி.இராஜேந்திரன், மாநில ஆதிதிராவிடர் நலக்குழு துணைச் செயலாளர் பா.துரைசாமி, மாநில பொறியாளர் அணி துணைச் செயலாளர் இரா.ப.பரமேஷ்குமார் உள்ளிட்ட 25 ஆயிரத்திற்கும் மேற்பட் டோர் கலந்து கலந்து கொண்டனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *