தொடரும் ரயில் விபத்துக்கள்

1 Min Read

உத்தரப்பிரதேசத்தில் ஓடிக்கொண்டிருந்த ரயில் திடீரென்று கொழுந்துவிட்டு எரிந்தது

இந்தியா

தர்பங்கா, நவ.16 டில்லியில் இருந்து தர்பங்கா சென்று கொண்டு இருந்த விரைவு ரயில் திடீரென தீப்பிடித்து எரிந்தது.  இதன் காரணமாக ரயில் உடனடியாக நிறுத்தப் பட்டதால் காயங்களோடு பயணிகள் தப்பினர். 

தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடை பெற்று வருதாக தகவல் தெரியவந்துள்ளது. 

தீ விபத்து குறித்து சஞ்சய் குமார் கூறுகையில், “டில் லியில் இருந்து பீகார் சென் றுக் கொண்டிருந்த ரயிலில் இரண்டு பெட்டி களில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்து நடந்த இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டு வரும் முயற்சியில் ஈடுபட்டனர். மேலும், ஆம்புலன்ஸ் மற்றும் மருத் துவக்குழுவினர் சம்பவ இடத்தில் உள்ளனர். காய மடைந்தவர்களுக்கு மருத் துவம் வழங்கப்படுகிறது” என்றார். ஆனால், ஒரு பெட்டியில் மட்டுமே தீப் பிடித்ததாக வட மத்திய ரயில்வே தெரிவித்துள்ளது. 

இதுகுறித்து வட மத்திய ரயில்வேயின் தலைமை மக்கள் தொடர்பு அதிகாரி ஹிமான்ஷு உபாத்யாய் கூறுகையில், “புது டில்லி- தர்பங்கா சிறப்பு விரைவு வண்டி எண் எஸ்1ல் இருந்து எட்டாவா அருகே சராய் போபட் சந்திப்பில் உள்ள காவலர் புகை வெளியேறு வதைக் கவனித்தார். 

பின்னர், ரயில் உடனடி யாக நிறுத்தப்பட்டு, பய ணிகள் அனைவரும் வெளி யேற்றப்பட்டனர். அனை வரும் பாதுகாப்பாக உள் ளனர். தற்போது வரை உயிர் சேதம் குறித்து எந்த தகவலும் இல்லை,” என்றார். 

 இந்த ஆண்டுமட்டும் பயங்கர ரயில் விபத்துகள் தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கிறது இது தொடர்பாக எந்த ஒரு ஆய்வு நடவடிக்கையும் எடுக்காமல் வந்தே பாரத் ரயிலை மட்டும் விடுவதில்  மோடி அரசு செயல் பட்டுக்கொண்டு இருப்பது கேள்விக்குறியாய் உள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *