6,382 விதிமீறல் புகார்கள் – ரூ.536 கோடி பறிமுதல்

Viduthalai
1 Min Read

மராட்டிய மாநில தேர்தல் ஆணையம் அறிவிப்பு

மும்பை, நவ.16 மகாராட்டிரத் தேர்தல் விதிகளை மீறியதாக இதுவரை 6,382 புகார்கள் தேர்தல் ஆணையத்திடம் பதிவாகியுள்ளன. மேலும், ரூ.536 கோடி, பரிசுப் பொருள்களும் பறிமுதல் செய்யப் பட்டுள்ளன.
மகாராட்டித்துக்கு கடந்த அக்டோபர் மாதம் 15 ஆம் தேதி தேர்தல் அறிவிக்கப்பட்டது. அன்று முதல் 14.11.2024 வரை தேர்தல் ஆணையத்தின் சிவிஜில் செயலியில் இந்தப் புகார்கள் பதிவு செய்யப்பட்டதாக தலைமைத் தேர்தல் அதிகாரி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சிவிஜில் செயலி இந்திய தேர்தல் ஆணையத்தால், பொதுமக்கள் புகாரளிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
கடந்த ஒரு மாத காலத்தில் 6,381 புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்தப் புகார்கள் சம்பந்தப்பட்ட துறையின் மூலம் தீர்வுகாணப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அக்டோபர் மாதம் 15 ஆம் தேதியில் இருந்து பல்வேறு மாநிலங்களில் இருந்து சட்ட விரோதமாக கொண்டு வரப்பட்ட ரூ.536.45 கோடி, மதுபா னங்கள், போதைப்பொருள்கள், தங்கம், வெள்ளி உள்பட விலையுயர்ந்த பொருள்களும் அமலாக்கத்துறையால் கைப்பற்றப்பட்டுள்ளன.
மகாராட்டிரத்தில் சட்டப்பேர வைத் தேர்தல் வருகிற 20 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதையொட்டி மாநிலம் முழுவதும் சட்டவிரோதமாக பணப்பரிமாற்றம் நடைபெறுவதைத் தடுக்க இந்திய தேர்தல் ஆணையம் மற்றும் அமலாக்கத்துறையினர் சோத னையில் ஈடுபட்டு வருகின்றனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *