2028இல் இந்திய ஊழியர்களின் எண்ணிக்கை 45.76 கோடியாக அதிகரிக்கும்!

1 Min Read

மும்பை, நவ.15- பல்வேறு துறை சார்ந்த ஊழியர்களின் எண்ணிக்கை 2028ஆம் ஆண்டில் 45.762 கோடியாக உயர்த்துவதற்கான செயல்திட்டத்தினை நடைமுறைப்படுத்துவதில் இந்தியா கவனம் செலுத்தி வருகிறது.
இந்தியாவில் ஊழியர்களின் எண் ணிக்கை 2023இல் 42.373 கோடியிலிருந்து 2028ல் 45.762 கோடியாக உயர்த்துவதற்கு தனது நீண்டகால செயல்திட்டத்தினை நடைமுறைப்படுத்துவதில் இந்தியா கவனம் செலுத்தி வருகிறது.
அமெரிக்க மென்பொருள் நிறுவன மான சர்வீஸ்-நவ் அறிக்கையின்படி, வளர்ந்து வரும் தொழில்நுட்பம் இந்தியாவின் வளர்ச்சித் துறைகளில் திறமைகளை மாற்றும் என்று தெரி வித்துள்ள நிலையில், இது 2028 க்குள் 27.3 லட்சம் புதிய தொழில்நுட்ப வேலைகளை உருவாக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அறிக்கையின்படி, இந்த தேவை அதிகரிப்பு சில்லறை வணிகர்களுக்கு மென்பொருள் பயன்பாட்டு மற்றும் தரவுப் பொறியியல் (டேட்டா இன் ஜினியரிங்) ஆகிய துறைகளில் திறமையை மேம்படுத்துவதற்கான மதிப்புமிக்க வாய்ப்பை இது வழங்கும்.
உற்பத்தி துறையில் (15 லட்சம் வேலைகள்), கல்வி துறையில் (8 லட்சத்து 40 ஆயிரம் வேலைகள்) மற்றும் சுகாதாரத் துறையில் (8 லட்சம் வேலைகள்) ஆகி யவை பொருளாதார வளர்ச்சி மற்றும் தொழில்நுட்ப மாற்றத்தால் உருவாகும்.
இந்தியாவின் வளர்ச்சி அதிகரிக்க, செயற்கை நுண்ணறிவு முக்கிய பங்கு வகிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *