பிற்படுத்தப்பட்டோருக்குத் தடைக்கல்!

1 Min Read

சிவில் சர்வீசஸ் தேர்வில் வெற்றி பெற்றாலும் கிரீமிலேயர் விவகாரத்தால் பணியில் சேருவதில் தடங்கல்
திமுக, காங். புகார்

புதுடில்லி, நவ.15- ஒன்றிய சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம் சார்பில் பிற்படுத்தப் பட்டோருக்காக அமல்படுத்தப்படும் பல்வேறு சமூக நல திட்டங்கள் குறித்து ஒன்றிய அரசு அதிகாரிகள் விளக்கம் அளித்தனர்.
இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் டி.ஆர்.பாலு(திமுக), மாணிக்கம் தாகூர்(காங்கிரஸ்),ராமசங்கர் ராஜ்பர்(சமாஜ்வாடி) ஆகியோர், கடந்த 2023ஆம் ஆண்டு நடந்த சிவில் சர்வீசஸ் தேர்வில் வெற்றி பெற்ற ஓபிசி பிரிவை சேர்ந்த பலர் பணியில் சேருவதற்கு கிரீமிலேயர் தடைக்கல்லாக இருக்கிறது என்றும்,கிரீமி லேயர் நிலையை உறுதி செய்வதில் அதிக தாமதம் ஏற்படுகிறது என்று குற்றம் சாட்டினர்.
இதுகுறித்து மாணிக்கம் தாகூர் எக்ஸ் வலைதளத்தில் பதிவிடுகையில், பணவீக்கம் மற்றும் பொருளாதார சூழ்நிலையை கணக்கில் கொண்டு கிரீமிலேயர் வரம்பில் அரசு மாற்றம் கொண்டுவரவில்லை. ஓபிசி மக்களுக்கு யார் துரோகம் செய்கிறார்கள்? என புரிந்துகொள்ள வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *