எப்படி அழைத்தாலும் நாங்கள் ‘இந்தியா’தான்: மோடிக்கு ராகுல்காந்தி பதில்

1 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

அரசியல்

புதுடில்லி,ஜூலை27- டில்லியில் 25.7.2023 அன்று நடைபெற்ற பா.ஜ.க. நாடாளுமன்ற உறுப்பினர் கள் கூட்டத்தில் எதிர்க்கட்சிகளின் கூட்டணி குறித்து பிரதமர் மோடி விமர்சித்துப் பேசுகையில், “எதிர்க் கட்சிகள் கூட்டணிக்கு “இந்தியா” என பெயர் வைத்துள்ளனர். 

ஆனால் பயங்கரவாத அமைப் பான இந்தியன் முஜாகிதீன் என்ற பெயரிலும், கிழக்கிந்தியா கம்பெனி என்ற பெயரிலும் “இந்தியா” உள்ளது” என்றார். அதற்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பதிலடி கொடுத்து உள்ளார்.

ராகுல் காந்தி தனது டிவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது, 

“நீங்கள் எங்களை எப்படி வேண்டுமானாலும் அழைக்கலாம் மிஸ்டர் மோடி. ஆனால், நாங்கள் இந்தியா”. மணிப்பூரை குணப்படுத்த நாங்கள் உதவுவோம். அங்குள்ள பெண்கள் மற்றும் குழந்தைகள் கண்ணீரைத் துடைப்போம். மணிப் பூரில் அன்பு மற்றும் அமைதியை நாங்கள் மீண்டும் கொண்டு வருவோம்.

இந்தியாவின் அடிப்படை கொள்கைகளை மணிப்பூரில் மீண் டும் கட்டியெழுப்புவோம்” எனக் கூறி உள்ளார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *