திறக்காத திருவாய்கள் இப்பொழுது திறப்பது – ஏன்?

1 Min Read

அரசியல்

மணிப்பூர் கலவரம் தொடர்பாக உச்சநீதிமன்ற தலைமை  நீதிபதி கருத்து தெரிவித்ததும் சமூகவலை தளங்களில் பாஜக மற்றும் ஹிந் துத்துவா அமைப்பினர் தலைமை நீதிபதியை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். 

”தலைமை நீதிபதி அனை வருக் குமான நீதிபதியாக இருக்க வேண்டும்.   அரசியல் பிரச்சினைகளின் கருத்து கூறக்கூடாது. எதிர்கட்சிகளில் குர லோடு இவரது குரலும் மோடிக்கு எதிராக உள்ளது” என்று விமர்சித்து வருகின்றனர்.  

அதில் சபாபதி மிஸ்ரா என்ற பார்ப்பனர் எழுதிய பதிவு மிகவும் மோசமானது.  அவர் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியின் மாற்றுத் திறனாளி மகள்களின் படத்தைப் போட்டு ”தேவையில்லாமல் மோடிக்கு எதிராக கருத்து சொல்வதால்தான் உனக்கு இப்படி பிள்ளைகள் பிறந்திருக்கின்றன” என்று பதிவிட்டுள்ளார். 

  உண்மை என்னவென்றால் பெருமூளை வாதத்தால் பாதிக்கப்பட்டு பெற்றோரால் கைவிடப்பட்ட இரண்டு பெண் குழந்தைகளை தலைமை நீதிபதி சந்திரசூட் தத்து எடுத்து வளர்த்து வருகிறார். இது தெரியாமல் ஹிந்துத்துவா அமைப்பினரும், பா.ஜ.க.வினரும் மடத்தனமாக கேவலமாக, அவரை வசைபாடி வருகின்றனர்.

ஆளுநர் அரசியல் பேசினால் இந்தக் கூட்டத்துக்கு லட்டு சாப்பிட்ட மாதிரி இருக்கிறது. தானாகவே முன்வந்து விசாரிக்கும் உரிமை உச்சநீதிமன்றம், உயர்நீதி மன்றத்துக்கு உண்டு என்பதற்கு இதற்குமுன் எத்தனையோ எடுத்துக்காட்டுகள் உள்ளன.

அப்பொழுதெல்லாம் திறக்காத இந்தத் ‘திருவாய்கள்’ இப்பொழுது திறப்பது ஏன்? ஏன்??

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *