இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 11 தமிழ்நாடு மீனவர்களுக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனையாம்!

1 Min Read

கொழும்பு, நவ.13- எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கடந்த அக்டோபர் மாதம் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த 11 மீனவர்களுக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டின் புதுக்கோட்டை மாவட்ட மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடந்த மாதம் 10ஆம் தேதி மீன்பிடிப்பதற்கான அனுமதிச் சீட்டை பெற்று மீனவர்கள் கடலுக்குச் சென்றனர்.

இதில் புதுக்கோட்டையைச் சேர்ந்த 15 மீனவர்கள் இலங்கை நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி அவர்களை கைது செய்த இலங்கை கடற்படையினர் அவர்களின் விசைப்படகையும் பறிமுதல் செய்தனர்.

பின்னர் சிறையில் அடைக்கப்பட்ட 15 மீனவர்களும், இலங்கை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது 11 மீனவர்கள் இரண்டாவது முறையாக எல்லை தாண்டி மீன்பிடித்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டிருப்பதாகவும், அவர்களுக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படுவதாகவும் இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் 4 மீனவர்களை விடுதலை செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *