வணிகவரித்துறை சாதனை கடந்த ஆண்டை விட ரூ.929 கோடி அதிகம் தமிழ்நாடு அமைச்சர் மூர்த்தி தகவல்

Viduthalai
4 Min Read

சென்னை, நவ. 12- வணிகவரித்துறை வரு வாய் 7 மாதங்களில் ரூ.79 ஆயிரத்து 772 கோடி கிடைத்துள்ளது. இது கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் ரூ.9 ஆயிரத்து 229 கோடி அதிகமாகும் என்று அமைச்சர் மூர்த்தி கூறினார்.
வணிகவரித்துறை இணை ஆணையர்களின் பணித் திறன் ஆய்வு கூட்டம், நந்தனத்தில் உள்ள ஒருங்கிணைந்த வணிகவரி (ம) பதிவுத்துறை அலுவலகக் கூட்டரங்கில் நேற்று (11.11.2024) நடந்தது. அமைச்சர் மூர்த்தி தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறிய தாவது:-
வணிகவரித் துறையில் கடந்த 2023-2024 நிதி ஆண் டின் முதல் ஏழு மாதங்கள் (ஏப்ரல் முதல் அக்டோபர் மாதம் வரை) ரூ.70 ஆயிரத்து 543 கோடி வருவாய் கிடைத் தது. இந்த 2024-2025 நிதி ஆண் டில் 7 மாதங்கள் அக்டோபர் மாதம் வரை ரூ.79 ஆயிரத்து 772 கோடி வருவாய் கிடைத் துள்ளது. கடந்த நிதி ஆண்டு வருவாயுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டின் அக்டோபர் மாதம் வரை கூடுதலாக ரூ.9 ஆயிரத்து 229 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது.
மேலும் ஜி.எஸ்.டி. வரி வருவாய் வளர்ச்சி இந்திய அள வில் 11.59 சதவீதமாக இருக் கிறது. ஆனால் தமிழ்நாட்டில் ஜி.எஸ்.டி. வரி வருவாய் வளர்ச்சி 19.39 சதவீதம் எட் டப்பட்டு உள்ளது. தொழில் நுட்பம் மற்றும் தரவுகளை பயன்படுத்தி வணிகவரித் துறையின் வருவாயை மேலும் கூட்டுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார். கூட்டத்தில் வணிகவரி மற்றும் பதிவுத்துறை அரசு முதன்மைச்செயலாளர் பிரஜேந்திர நவ்நீத், வணிகவரித்துறை ஆணையர் ஜெகநாதன், இணை ஆணையர் (நிர்வாகம்) துர்காமூர்த்தி மற்றும் வணிகவரித்துறை உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

டில்லி தலைநகரில் 40 விழுக்காடு
மக்கள் காற்றுமாசால் பாதிப்பு

தமிழ்நாடு
புதுடில்லி, நவ. 12- மாசு அதிகரிப்பால் டில்லியில் 40% மக்களுக்கு சுவாசக் கோளாறு ஏற்பட்டுள்ளது. தற்போது தலைநகர் டில்லியில் காற்று மாசு அதிகரித்து வருகிறது. இதனால் தீபாவளிக்கு பிறகு காற்று மாசு பாதிப்பு குறித்து உள்ளூர் வட்டாரக்குழுவால் ஒரு ஆய்வு நடத்தப்பட்டது. இந்த ஆய்வில் மாசு பாதிப்பு மக்களிடத்தில் எப்படி உள்ளது, அவர்கள் மாசு தொடர்பான பிரச்சினைகளுக்காக மருத்துவமனைகளுக்கு சென்றார்களா? என்பது பற்றி கேள்விகள் கேட்கப்பட்டன.
நேற்று (11.11.2024) வெளியிடப்பட்ட இந்த ஆய் வின் முடிவுகளின்படி கடந்த 3 வாரங்களில் 40 சதவீத குடும்பத்தினர் மாசு பிரச்சினைகளால் மருத்துவ மனைகளுக்கு சென்று வந்தது கண்டறியப்பட்டு உள்ளது.
அதன்படி 10இல் 4 குடும்பத்தினர் சுவாசக்கோளாறு, இருமல், சளி, காய்ச்சல் போன்ற உடல்நல பிரச்சினை களுக்காக மருத்துவமனைகளுக்கு சென்று வந்துள்ளனர்.

10 ஆவது இந்திய-பன்னாட்டு
அறிவியல் விழா அசாமில் துவங்குகிறது
கவுஹாத்தி, நவ. 12- அசாம் மாநிலத்தில் உள்ள குவஹாத்தி அய்அய்டியில் நவம்பர் 30 முதல் டிசம்பர் 3ஆம் தேதி வரை 4 நாட்கள் ஒன்றிய அரசு சார்பில் 10ஆவது இந்திய பன்னாட்டு அறிவியல் விழா நடைபெற உள்ளது. இவ்விழாவில் பங்கேற்க பள்ளி மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
ஆண்டுதோறும் அறிவியல் சிந்தனையைத் தூண்ட வும், அறிவியலை சாதாரண மக்களுடன் இணைந்து விஞ்ஞானிகள் கொண்டாடி மகிழவும் இந்திய பன்னாட்டு அறிவியல் விழா நடத்தப்பட்டு வருகிறது. இந்த விழாவை ஒன்றிய அறிவியல் தொழில்நுட்ப அமைச்சகமும், ஒன்றிய புவியியல் அமைச்சகமும் இணைந்து நடத்துகின்றன. நவம்பர் 30ஆம் தேதி முதல் டிசம்பர் 3 ஆம் தேதி வரை 10ஆவது இந்திய பன்னாட்டு அறிவியல் விழா அசாம் மாநிலத்தில் உள்ள குவஹாத்தி அய்அய்டியில் கோலாகலமாக நடைபெற உள்ளது. இதில் விஞ்ஞானிகள், ஆராய்ச்சி மாணவர்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள், ஆசிரியர்கள், பொதுமக்கள் என அனைத்து தரப்பினரும் கலந்து கொள்கின்றனர்.
விழா தொடர்பாக முழு விவரங்களையும் www.iisf2024.in என்ற இணையதளத்தில் அறிந்துகொள்ளலாம் என அறிவிக்கபட்டுள்ளது. விழாவில். பங்கேற்க தேர்வு செய்யப்படுவோருக்கு தங்கும் வசதி, உணவு வசதி உள்ளிட்ட அனைத்து வசதிகளும் ஏற்பாடு செய்யப்படும். எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் அசாதாரண தட்பவெப்பம்
கடந்த 9 மாதத்தில் 3,238 பேர் உயிரிழப்பு
புதுடில்லி, நவ. 12- இந்தியாவில் அசாதாரண தட்ப வெப்பத்துக்கு கடந்த 9 மாதங்களில் 3,200 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. டில்லியைச் சேர்ந்த அறிவியல் மற்றும் சுற்றுச்சூழலுக்கான மய்யம் வெளியிட்ட ஆய்வறிக்கையில், ‘இந்த ஆண்டின் முதல் 9 மாதங்களில் (ஜனவரி முதல் செப்டம்பர் வரை) 93 சதவீத நாள்கள் அதாவது மொத்தமுள்ள 274 நாள்களில், 255 நாள்கள் அசாதாரண தட்பவெப்ப நிலையை இந்தியா சந்தித்துள்ளது. இதன் காரணமாக, நாடு முழுவதும் 2,35,862 வீடுகள் மற்றும் கட்டடங்கள் சேதமடைந்தன; 3,238 பேர் உயிரிழந்தனர்.
92,457 கால்நடைகள் உயிரிழந்தன; 32 லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த பயிர்கள் முழுமையாக சேதமடைந்தன. அதே 2023ஆம் ஆண்டின் முதல் 9 மாதங்களில் 273 நாள்களில், 235 நாள்கள் அசாதாரண தட்பவெப்ப நிலையைச் சந்தித்தன. இதனால், 2,923 பேர் உயிரிழந்தனர்; 92,519 கால்நடைகள் உயிரிழந்தன; 80,293 வீடுகள் சேதமடைந்தன; 18.4 லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த பயிர்கள் சேதமடைந்தன’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *