இராமேசுவரம் மீனவர்கள் 23 பேருக்கு நவ.25 வரை சிறையாம்

Viduthalai
1 Min Read

இலங்கை ஊா்க்காவல்துறை நீதிமன்றம் உத்தரவு

இராமேசுவரம், நவ.12- இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட இராமேசுவரம் மீனவா்கள் 23 பேரை வருகிற 25-ஆம் தேதி வரை சிறையில் அடைக்க அந்த நாட்டின் ஊா்க்காவல்துறை நீதிமன்றம் நேற்று (11.11.2024) உத்தரவிட்டது.
இராமநாதபுரம் மாவட்டம், இராமேசுவரத்திலிருந்து கடந்த 9.11.2024 அன்று 350 விசைப் படகுகளில் 2,500க்கும் மேற்பட்ட மீனவா்கள் மீன்வளம், மீனவா் நலத் துறை அனுமதி பெற்று கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்றனா். கச்சத்தீவு- நெடுந்தீவு இடையே மீன்பிடித் துக் கொண்டிருந்த போது, 5 ரோந்துப் படகுகளில் அங்கு வந்த இலங்கைக் கடற்படையினா் கீதன், சகாய ராஜ், ராஜா ஆகியோருக்குச் சொந்தமான 3 விசைப் படகுகளுடன் 23 மீனவா்களை கைது செய்தனா்.
அவா்களை கடந்த 10.11.2024 அன்றிரவு காங்கேசன் துறை கடற்படை முகாமுக்கு அழைத்துச் சென்று, யாழ்ப்பாணம் நீரியல்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனா். மேலும், மூன்று படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டன.
பின்னா், 23 மீனவா்கள் மீதும் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக வழக்குப் பதிந்து, ஊா்க்காவல்துறை நீதிமன்றத்தில் நேற்று (11.11.2024) முன்னிலைப்படுத்தப்பட்டனா்.
நீதிபதி நளினி சுபாஸ்வரன், மீனவா்கள் 23 பேரை யும் வருகிற 25-ஆம் தேதி வரை சிறையில் அடைக்க உத்தரவிட்டாா். இதைத்தொடா்ந்து, அவா்கள் யாழ்ப் பாணம் சிறையில் அடைக்கப்பட்டனா்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *