கோலாலம்பூரில் 11–ஆவது உலகத் தமிழர் பொருளாதார மாநாடு!

Viduthalai
5 Min Read

வி.ஆர்.எஸ். சம்பத் முன்னிலையில் சட்டப்பேரவைத் தலைவர் மு.அப்பாவு, அமைச்சர் துரைமுருகன், எஸ்.ஜெகத்ரட்சகன் எம்.பி. பங்கேற்பு!

கோலாலம்பூர், நவ.12- பதினொன்றாவது உலகத் தமிழர் பொருளாதார மாநாடு, மலேசி யாவில் உள்ள கோலாம்பூரில் நடைபெறுகிறது.
இது குறித்து மாநாட்டு அமைப்பாளர் வி.ஆர்.எஸ். சம்பத் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:–

உலகளாவிய பொருளாதார உச்சி மாநாடு 2024 மற்றும் பதினொன் றாவது உலகத் தமிழர் பொருளாதார மாநாடு வருகின்ற நவம்பர் மாதம் 15ஆம் தேதி முதல் 17ஆம் தேதி வரை மூன்று நாட்கள் மலேசிய நாட்டில் உள்ள கோலாலம்பூர் மாநாட்டு அரங்கத்தில் (ஓஃஇஇ) நடைபெற உள்ளது.
இம்மாநாட்டினை தமிழ்நாடு நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன் அவர்கள் 15.11.2024, அன்று தொடக்கி வைக்கிறார்.

மலேசியாவிற்கான இந்திய தூதர் பி.என்.ரெட்டி தலைமையேற்கிறார். 17.11.2024, அன்று நிறைவு விழாவில் தமிழ்நாடு சட்ட மன்ற பேரவைத் தலைவர் மு.அப்பாவு அவர்கள் நிறைவுரை வழங்குகிறார்.

மலேசியா உச்சநீதி மன்ற நீதிபதி வசீர் ஆலம் விருது வழங்க உள்ளார். மேனாள் சுகாதார அமைச்சர் டத்தோ செரி டாக்டர் சுப்பிரமணியம், மலேசிய கல்வித் துறை மேனாள் துணை அமைச்சர் டான் செரி மாரிமுத்து ஆகியோர் சிறப்பு விருந்தின ராகக் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகிறார்கள்.

புதுச்சேரி தொழில்துறை அமைச்சர் நமச்சிவாயம், நாடா ளுமன்ற உறுப்பினர் எஸ்.ஜெகத் ரட்சகன், புதுச்சேரி மேனாள் பேரவைத் தலைவர் வி.பி.சிவக் கொழுந்து, விஜிபி நிறுவனக் குழுமத் தலைவர் டாக்டர் வி.ஜி. சந்தோஷம், பிஜிபி நிறுவனக் குழுமத் தலைவர் டாக்டர் பழனி ஜி.பெரியசாமி, அபுபக்கர் நிறுவனத் தலைவர் அபுபக்கர் மற்றும் பல வெளிநாட்டு பிரமுகர்கள் கலந்து கொண்டு உரையாற்ற உள்ளனர்.

இந்த மாநாட்டின் வரவேற்பு குழு தலைவராக மலேசிய நாட்டு தேசிய நில நிதி கூட்டுறவு சங்க இயக்குநர் டத்தோ. பி.சகாதேவன், மேனாள் துணை அமைச்சர் டான் சிரி பேராசிரியர் மாரிமுத்து, ஆலோசகர் நாகராஜன், தொழில் தலைவர் முபாரக் ஒருங்கிணைப்பாளராகவும் இருந்து மாநாட்டினை நடத்தித் தர உள்ளனர். சென்னை வளர்ச்சிக் கழகம் மற்றும் உலகத் தமிழர் பொருளாதார நிறுவனத் தலைவர் டாக்டர் வி.ஆர்.எஸ். சம்பத் உலகம் முழுவதும் மாநாட்டு பணிகளை ஒருங்கிணைத்து பணியாற்றி வருகிறார்.

பொருளாதார மேம்பாடுக்காக நெருக்கமான கூட்டுறவையும் கூட்டாண்மை யையும் உருவாக் குவதற்கான உலகளவில் பன்னாட்டு சமூகத்துடனும், வணிகத் தலைவர் களுடனும், வல்லுநர்களுடன் உரையாடுதலை இந்த மாநாடு ஊக்குவிக்கும். சமூக பொருளாதார வளர்ச்சிக்கான சிறப்பு வாய்ந்த அரசு பிரதிநிதிகளும் அமைச்சர்களும் கொள்கை வகுப்பாளர்களும் உலகளாவிய தலைவர்களும் இந்த மாநாட்டில் சொற்பொழிவுகளை வழங்குவார்கள்.
வணிகத் தலைவர்களும் தொழில்முனைவோர்களும் வல்லுநர்களும் சுயதொழில் குழுக் களும் வணிக அமைப்புகளும் பிறரும் இம்மாநாட்டில் கலந்து கொள்ள விருக்கிறார்கள்.

முதலாவது உலகத் தமிழர் பொருளாதார மாநாடு சென்னை யில் 2009இல் நடத்தப்பட்டது. இரண்டாவது மாநாடு 2011இல் துபாயில் நடத்தப்பட்டது. மூன்றாவது மாநாடு 2016இல் சென்னையில் நடந்தது. நான்காவது மாநாடு 2017–இல் தென்னாப்பிரிக்கா டர்பனிலும் அய்ந்தாவது மாநாடு 2018–இல் பாண்டிச்சேரியிலும் ஆறாவது மாநாடு 2019இல் சென்னையிலும் நடத்தப்பட்டது.

ஏழாவது மாநாடு 2020 டிசம்பரில் சென்னையில் இணையவழியில் நடந்தது. எட்டாவது மாநாடு 2021இல் சென்னையிலும் ஒன்பதாவது மாநாடு 2023–இல் துபாயிலும் நடத்தப் பட்டன. பத்தாவது மாநாடு 2024–இல் சென்னையில் நடத்தப்பட்டது.

இம்மாநாட்டில் முதலீடு வணிக வாய்ப்புகள், தொழில் மேம்பாடு சந்திப்புகள் என பல்வேறு நிகழ்ச் சிகள் நடைபெற உள்ளது. சிறப்பு பேச்சாளர்கள், சொற்பொழிவு ஆற்ற உள்ளனர். 10க்கும் மேற்பட்ட அமர்வுகள் நடைபெற உள்ளது. புகழ் வாய்ந்த வணிகத் தலைவர்கள், தமிழர்களின் தலைவர்கள், தொழில் வல்லுநர்கள் என முக்கிய பிரமுகர் களுக்கு உலகத் தமிழர் மாமணி/உலக வணிகத் தலைவர் மாமணி விருதுகள் வழங்கப்பட உள்ளன.

கண்கவர் கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. விருந்துடன் கூடிய சந்திப்புகள் நடைபெற உள்ளன. இம்மாநாட்டில் பல்வேறு நாடுகளிலிருந்து தேர்வு செய்யப் பட்ட சமூகத் தலைவர்கள் 10 பேருக்கு உலகத் தமிழ் மாமணி விருது வழங்கப்பட உள்ளது.

முதன்முறையாக தமிழ் சமூகத்திற்கு பாடுபட்ட 50 ஆண்டுகள் நிறைவு செய்த அமெரிக்காவில் உள்ள தமிழ்நாடு பவுண்டேஷன் நிறுவனத்திற்கு சிறப்பு விருது வழங்கவிருக்கிறோம். அதேபோல 2017இல் தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற நான்காவது உலகத் தமிழர் பொருளாதார மாநாட்டின் தாக்கத்தால் தொடங்கப்பட்ட தமிழ் வணிக வீரர்கள் எனும் அமைப்பு தென்னாப்பிரிக்கா தமிழர் பொருளா தார மேமம்பாட்டிற்கு பெற பெரிதும் உதவும் வகையில். எனவே இந்த நிறுவனமும் விருது பெறுகின்றது.

உலகத் தமிழர் மாமணி விருது பெறும் விருதாளர்கள்

1. டத்துக் சிரி முகமது இக்பால் ராவுத்தர் – தலைவர், மலேசியா உலகளாவிய வணிக மன்றம், கோலாலம்பூர், மலேசியா.
2. டத்தோ சிரி என். கோபா லகிருஷ்ணன் – தலைவர், மலேசியா இந்திய வர்த்தக மற்றும் தொழிற் மன்றங்கள் கூட்டமைப்பு, கோலா லம்பூர், மலேசியா,
3. டாக்டர் அன்சாரி வாஹித் – தலைமை நிர்வாக அதிகாரி, அதீப் குழும நிறுவனங்கள், அபுதாபி.
4. தி.குறிஞ்சி செல்வன் – வணிகத் தலைவர்/ தலைவர், டோக்கியோ தமிழ் சங்கம், ஜப்பான்.
5. டாக்டர் சின்னு பழனிவேலு – தலைவர், சிங்கப்பூர் தெற்காசிய வர்த்தக மற்றும் தொழில் மன்றம், சிங்கப்பூர் (SSACCI)
6. டாக்டர் பிரேமா சுபாஷ்கரன் அல்லிராஜா – நிர்வாகத் தலைவர், லைக்கா ஹெல்த் மற்றும் கிம்ஸ் மருத்துவமனை, லண்டன், இங் கிலாந்து. தலைவர், ஞானம் பவுண் டேஷன்.
7. குமார கணேசன் – தலைவர், மொரிஷியஸ் தமிழ் கோயில்கள் கூட்டமைப்பு, மொரிஷியஸ்.
8. டாக்டர் எஸ். பீட்டர் –- நிறுவனர் மற்றும் தலைவர், மாதா கல்வி நிறுவனங்கள், சென்னை.
9. த.சரவணன் – தலைவர், சென்ட்ரல் சட்டக் கல்லூரி, சேலம்.
10. டாக்டர் அப்துல் பாசித் சையத் – வணிகத் தலைவர், லண்டன், இங்கிலாந்து.
11. தமிழ்நாடு பவுண்டேஷன், அமெரிக்கா (வீரா வேணு கோபால் மற்றும் சிவமூப்பனார், அமெரிக்கா)
12. தமிழ் வணிக போராளிகள், தென்னாப்பிரிக்கா, (தலைவர், கார்த்தி முத்துசாமி).

இந்த மாநாடு பற்றிய முழு தகவல்களையும் www.economic-conference.com என்ற இணையதள முகவரியில் அறிந்து கொள்ளலாம்.
இவ்வாறு வி.ஆர்.எஸ். சம்பத் தமது அறிக்கையில் கூறியுள்ளார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *