அய்டிபிஅய் வங்கியில் 1,000 காலி இடங்கள்

1 Min Read

அய்.டி.பி.அய். வங்கியில் காலியாக உள்ள 1,000 இடங்களுக்கு விண்ணப்பம் வரவேற்கப்பட்டுள்ளது. எக்சிகியூட்டிவ் சேல்ஸ் அண்ட் ஆபரேஷன் (இ.எஸ்.ஓ) நிலையிலான பதவிகளுக்கு விண்ணப்பிக்க வருகிற 16ஆம் தேதி கடைசி நாளாகும். வேலையில் சேர விரும்புவோர், https: //www.idbibank.in/idbi-bank-careers -current-openings.aspx விண்ணப்பிக்க வேண்டும்.

30 நொடிகளில்
உலகைச் சுற்றி…

இந்தியா

டொனெட்ஸ்க் பிராந்தியத்தில் 9 பேரை கொன்ற ரஷ்ய வீரர்களுக்கு உக்ரைன் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்தது.
பீசாட்-2 என்ற தொலையுணர்வு செயற்கைக்கோள் புவி சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டதாக சீனா தெரிவித்துள்ளது.
தென்கொரியாவில் தொழிலாளர்களின் நலன்களை மேம்படுத்தும்படி அந்நாட்டு தொழிற்சங்கங்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன.
அதிபர் தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு அயர்லாந்து நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது.
வரலாற்றுச் சாதனையாளர்கள்
வரலாற்றின் தந்தை – ஹெரடோடஸ்
புவியியலின் தந்தை – தாலமி
இயற்பியலின் தந்தை – நியூட்டன்
கணிப்பொறியின் தந்தை – சார்லஸ் பாபேஜ்
தாவரவியலின் தந்தை – தியோபிராச்டஸ்
விலங்கியலின் தந்தை அரிஸ்டாட்டில்
பொருளாதாரத்தின் தந்தை – ஆடம் ஸ்மித்
சமூகவியலின் தந்தை – அகஸ்டஸ் காம்தே
மரபியலின் தந்தை – கிரிகர் கோகன் மெண்டல்
நவீன மரபியலின் தந்தை – டி.எச்.மார்கன்.
உடனே விண்ணப்பிக்கலாம்
பரோடா வங்கியில் வேலைவாய்ப்பு
பிஓபி (பாங்க் ஆஃப் பரோடா) வங்கியில் 592 ஸ்பெஷலிஸ்ட் ஆபீசர் பதவிகளுக்கு விண்ணப்பம் கோரப்பட் டுள்ளது. இதற்கு கல்வித் தகுதி, பி.இ., பி.டெக்., எம்.பி.ஏ., எம்.சி.ஏ., சி.ஏ./சி.எம்.ஏ. ஆகும். வயது வரம்பு, பதவியின் தன்மைக் கேற்ப மாறுபடும். அரசு விதிமுறைப்படி 3-5 வயது வரை வயது தளர்வு உண்டு. https://www.bankofbaroda .in/career/current-opportunities இணையதளத்தில் வரும் 19ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *