சாமியார் முதலமைச்சர் ஆதித்யநாத் ஜார்கண்ட் தேர்தலை கருத்தில் கொண்டு ‘‘படோகேதோ கட்டேங்கே (ஹிந்துக்களே) பிளவுபட்டால் (முஸ்லீம்களால்) வெட்டப்படுவீர்கள்’’ என்று பேசி வருகிறார்
Yogi Adityanath ji is repeatedly repeating this slogan ‘‘If we divide, we will be cut.’’
மனுதர்மத்தை எடுத்துக்கொண்டால் இவர்கள் கூறும் ஹிந்து மதத்தவரை 4 பாகமாகப் பிளவு படுத்தி எழுதி உள்ளது
இன்றுவரை இந்தப்பிளவினால் இன்றும் தாழ்த்தப்பட்ட இதர பிற்படுத்தப்பட்ட மக்கள் கொல்லப்படுகின்றார்களே.
குஜராத்தில் இன்றுவரை பல கிராமங்களில் தாழ்த்தப்பட்ட சமூகத்தினர் வாழும் பகுதிகளில் நண்பகலுக்குப் பிறகுதான் தண்ணீர் வழங்கப்படுகிறது.
உத்தராகண்ட் கோவில்களில் இன்றும் சூத்திரர்கள் உள்ளே நுழையக்கூடாது என்று சிவப்பு வண்ணத்தில் எச்சரிக்கை எழுதப்பட்டுள்ளதே,
உண்மையில் பிளவு படுத்தியது இவர்கள் தான், இன்று இவர்களே, ‘‘பிளவுபட்டால் வெட்டப்படுவீர்கள்’’ என்று கூறுவது நகைச்சுவையாகும்.
உ.பி. முதலமைச்சரின் விபரீதப் பேச்சு!

Leave a Comment