உ.பி. முதலமைச்சரின் விபரீதப் பேச்சு!

1 Min Read

சாமியார் முதலமைச்சர் ஆதித்யநாத் ஜார்கண்ட் தேர்தலை கருத்தில் கொண்டு ‘‘படோகேதோ கட்டேங்கே (ஹிந்துக்களே) பிளவுபட்டால் (முஸ்லீம்களால்) வெட்டப்படுவீர்கள்’’ என்று பேசி வருகிறார்
Yogi Adityanath ji is repeatedly repeating this slogan ‘‘If we divide, we will be cut.’’
மனுதர்மத்தை எடுத்துக்கொண்டால் இவர்கள் கூறும் ஹிந்து மதத்தவரை 4 பாகமாகப் பிளவு படுத்தி எழுதி உள்ளது
இன்றுவரை இந்தப்பிளவினால் இன்றும் தாழ்த்தப்பட்ட இதர பிற்படுத்தப்பட்ட மக்கள் கொல்லப்படுகின்றார்களே.
குஜராத்தில் இன்றுவரை பல கிராமங்களில் தாழ்த்தப்பட்ட சமூகத்தினர் வாழும் பகுதிகளில் நண்பகலுக்குப் பிறகுதான் தண்ணீர் வழங்கப்படுகிறது.
உத்தராகண்ட் கோவில்களில் இன்றும் சூத்திரர்கள் உள்ளே நுழையக்கூடாது என்று சிவப்பு வண்ணத்தில் எச்சரிக்கை எழுதப்பட்டுள்ளதே,
உண்மையில் பிளவு படுத்தியது இவர்கள் தான், இன்று இவர்களே, ‘‘பிளவுபட்டால் வெட்டப்படுவீர்கள்’’ என்று கூறுவது நகைச்சுவையாகும்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *