பிஜேபியின் வெறுப்பு பேச்சு காங்கிரஸ் தலைவர் கார்கே குற்றச்சாட்டு

2 Min Read

பெங்களூரு, நவ.10 ‘‘காங்கிரஸ் அரசின் வாக்குறுதித் திட்டங்கள் குறித்து, பிரதமர் நரேந்திர மோடி உட்பட பா.ஜ., தலைவர்கள் அனைவரும் அவதுாறு பரப்புகின்றனர்,” என, காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே குற்றஞ்சாட்டினார். பெங் களூரில் நேற்று (9.11.2024) அவர் அளித்த பேட்டி:

எங்கள் நிதிநிலை அறிக்கையை பா.ஜ., தலைவர்கள் சரியாக படிக்கவில்லை. முதலில் தெளிவான தகவலை தெரிந்து கொண்டு, அதன்பின் பேச வேண்டும். கருநாடக அரசின் அய்ந்து வாக்குறுதித் திட்டங்களை காப்பியடித்து மத்தியப் பிரதேசம், மகாராட்டிரா, குஜராத், ராஜஸ்தான் உட்பட பல்வேறு மாநிலங்களின் சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ., வாக்குறுதி அளித்துள்ளது.

ஆனால் கருநாடக அரசுக்கு கெட்ட பெயரை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில், பிரதமர் மோடி உட்பட பா.ஜ., தலைவர்கள், வாக்குறுதித் திட்டங்கள் குறித்து அவதுாறு பரப்புகின்றனர். கருநாடகா உட்பட பல இடங்களில் காங்கிரஸ் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளது.

கருநாடகாவில் அய்ந்துத் திட்டங்கள் வெற்றிகரமாக செயல்படுத்துகிறது. பா.ஜ.,வினர் பொய்யான வாக்குறுதிகளை அளித்து, மக்களை திசை திருப்புகின்றனர்.

பிரதமர் மோடி இதற்கு முன்பு, எட்டு கோடி வேலை வாய்ப்புகளை உருவாக்கு வதாக கூறியிருந்தார். அதை செயல்படுத்தினாரா? விவ சாயிகளின் வருவாயை இரட்டிப்பாக்கினாரா, ஒவ் வொருவரின் கணக்கிலும், 15 லட்சம் ரூபாய் செலுத்தினாரா?

இரண்டு ஆண்டுகளில் புல்லட் ரயில் கொண்டு வருவதாக வாக்குறுதி அளித் தார். அவர் அளித்த எந்த வாக்குறுதியையும் நிறைவேற்ற வில்லை. மத்தியில், காங்கிரஸ் அரசு இருந்தபோது, கொடுத்த வாக்குறுதிகளின்படி நடந்து கொண்டது.ஜார்க்கண்டில் பிரதமர் உரையாற்றியபோது, பொய் பிரசாரம் செய்தார். அதற்கு நான் அங்கேயே விளக்க மளித்தேன். கர்நாடகா வில் வாக்குறுதித் திட்டங்களுக்கு 52,000 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. இதில் 47 சதவீதம் தொகை செலவிடப்பட்டுள்ளது. பா.ஜ., தேர்தலுக்காக பொய்ப்பிரசாரம் செய்கின்றனர். இதை மக்கள் நம்பக்கூடாது.

வக்பு விடயம் தொடர் பாக, நான் எதுவும் கூறமாட் டேன். சட்டம் குறித்து அமைக்கப் பட்ட நாடாளுமன்ற, இணை கமிட்டியில் நானும் உறுப்பினராக இருக்கி றேன். மக்களவையில் கமிட்டி அறிக்கை தாக்கல் செய்யும் போது, என் கருத்தை தெரி விப்பேன்.

மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரம் குறித்து, நான் அவ்வப்போது பேசமாட்டேன். மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரம் குறித்து ஆய்வு செய்ய நாங்கள் குழு அமைத்துள்ளோம். இதில் இபிஷேக் மனு சிங்வி, கபில் சிபில் உட்பட, பலர் உள் ளனர். அவர்களின் அறிக் கையை எதிர்பார்க்கிறோம் என்று கூறினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *