சென்னை, நவ.10 சென்னையில் அடுத்து வரும் சில நாட்கள் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மய்யம் அறிவித்துள்ளது.
இதையடுத்து சென்னை நகரில் வெள்ளம் தேங்காமல் தடுக்கும் நடவ டிக்கைகளை சென்னை மாநகராட்சி தொடங்கியுள்ளது.
இது தொடர்பாக சென்னை மாநக ராட்சி மேயர் ஆர்.பிரியா நேற்று (9.11.2024) செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
‘‘சென்னையில் சமீபத்தில் 2 நாட்கள் பெய்த மழையால் சில பகுதிகளில் தண்ணீர் தேங்கியது கண்டறியப்பட்டு உள்ளது. சென்னையில் 24 மணி நேரத்திற்கும் மேலாக மழைநீர் தேங்கும் பகுதிகள் கண்டறியப்பட்டு இனிவரும் நாட் களில் தண்ணீரை விரைந்து அகற்ற முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது. சென்னையில் ஒரு சில பகுதிகளில் மோட்டார்கள் மூலம் மழைநீரை அப்புறப்படுத்த வேண்டிய நிலை உள்ளது. அங்கு மோட்டார்கள் அமைத்து மழைநீர் உடனடியாக வெளியேற்றப்படும். இதற்காக மாநகராட்சி தயார் நிலையில் இருக்கிறது.’’ இவ்வாறு அவர் கூறினார்.