ஒன்றை மட்டும் உங்களுக்கு நிச்சயமாக எடுத்துச் சொல்ல நான் ஆசைப்படுகிறேன். ஆரியர்கள் என்று இந்த நாட்டில் காலடி எடுத்து வைத்தார்களோ அன்று முதல் தமிழையும், தமிழரின் கலைகளையும், கலாச்சாரத்தையும் ஒழிப்பதிலேயே அவர்கள் கண்ணுங் கருத்துமாய் இருந்து வருகிறார்கள். இந்த ஆரிய சூழ்ச்சி சென்ற 2500 ஆண்டுகளாகத் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தென்னாட்டை ஆரிய நாடாக ஆக்க வேண்டும் என்ற ஒரே குறிக்கோளோடு இவர்கள் பல நூற்றாண்டுகளாக விடாமுயற்சி செய்து வருகிறார்கள். இதற்காகவே ஆரியர்கள் சிலர் தம்மையும் தமிழர்கள் என்று கூறிக் கொண்டும் நம்முடன் சேர்ந்து கொண்டும் நயவஞ்சகமாக நமக்கு நன்மை செய்வதுபோல் ஏதாயினும்கூறி, நம்மை ஏமாற்றி, நம்மை வடநாட்டு ஆரியருக்கு அடிமைப்படுத்த பெருமுயற்சி செய்து வருகிறார்கள். இம்முயற்சிக்கு நாம் ஏமாந்து போய்விடக் கூடாது.
மறைமலையடிகளார் 17.7.1948 ஹிந்தி எதிர்ப்பு மாநாட்டுத் தலைவர்
‘குடிஅரசு’ – 31.07.1948