இதுதான் உத்தரப்பிரதேசம்!

viduthalai
1 Min Read

‘தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த நீ என்னை எப்படித் தொடலாம்?’
தலைமைக் காவலரின் ஜாதி ஆணவ செயல்!

ஹத்ரஸ் (உபி), நவ.10 உத்தரப்பிரதேசம் ஹத்ரஸ் பகுதியில் ஆற்றங்கரையில் இளைஞர்கள் ராணுவத்தில் சேர பயிற்சி எடுப்பது வழக்கம்.

கடந்த 8.11.2024 அன்று தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ராஜா கவுசிக் என்ற இளைஞர் தூரம் தாண்டுதல் பயிற்சியின் போது, அங்கே நின்றுகொண்டு வேடிக்கைப் பார்த்துகொண்டு இருந்த தலைமைக் காவலர் மீது அவரது கை பட்டுவிட்டது.

இதனை அடுத்து தலைமைக் காவலர் அந்த இளைஞரைக் கடுமையாகத் தாக்க துவங்கி னார். அந்த இளைஞர், ‘‘தெரியாமல் பட்டுவிட்டது, மன்னித்துகொள்ளுங்கள்‘‘ என்று கூறியும் கேட்காமல், அவரை கைது செய்து, அவர் மீது ‘‘அரசு பணியாளர்களை வேலை செய்யவிடாமல் தடுத்தார் என்றும், காவல்துறை சீருடையை இழிவுபடுத்திவிட்டார்’’ என்றும் வழக்குப் பதிவு செய்து விட்டார்.

தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ராஜா கவுசிக் அண்மையில் கல்லூரிப் படிப்பை முடித்து விட்டு ராணுவத்தில் சேர்வதற்குப் பயிற்சி எடுத்துக்கொண்டு இருந்தார். ஏற்கெனவே இவர் உத்தரப்பிரதேச காவல்துறை சேர்க்கைக்கான தேர்வை எழுதிவிட்டு, முடிவிற்காகக் காத்திருக்கும் நிலையில், தற்போது ராணுவத்திற்கும் பயிற்சி எடுத்துக்கொண்டு இருக்கிறார்.

இந்தநிலையில் இவர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளதால், காவல்துறை மற்றும் ராணுவத்தில் சேர முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

பி.ஜே.பி. ஆளும் உத்த ரப்பிரதேசம் எந்த அளவு ஜாதி வெறி பிடித்து அலைகிறது என்ப தற்கு இதைவிட வேறு என்ன எடுத்துக்காட்டுத் தேவை?

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *