பீகார் – ராஷ்டிரிய ஜனதா தள கட்சியின் தலைவர் தேஜஸ்வி அவர்களுக்குத் தமிழர் தலைவர் பிறந்த நாள் வாழ்த்துச் செய்தி!

1 Min Read

ராஷ்டிரிய ஜனதா தள கட்சி யின் தலைவரும், பீகார் மாநில மேனாள் துணை முதலமைச்சருமான தேஜஸ்வி அவர்களுக்கு 36 ஆம் ஆண்டு பிறந்த நாள் (9.11.2024) வாழ்த்துச் செய்தியினை தமிழர் தலைவர் ஆசிரியர் அனுப்பினார்.

‘‘சமூகநீதிக்காகப் பாடுபடும் வடபுல அரசி யல் கட்சித் தலைவரான தேஜஸ்வி அவர்கள் தொடர்ந்து ஒடுக்கப்பட்ட மக்களின் மேம்பாட்டிற்குப் பாடுபடவேண்டும். சமூகநீதிக்கு எதிராக தந்திரமாக செயல்பட்டுவரும் பா.ஜ.க. ஒன்றிய அரசின் திட்டங்களை முறியடிக்கும் இந்தியா கூட்டணி மேலும் பலத்துடன் செயல்பட வாழ்த்துகிறோம்‘‘ என்று தமது வாழ்த்துச் செய்தியில் தமிழர் தலைவர் ஆசிரியர் தெரிவித்துள்ளார்.

மேலும், ‘‘ராஷ்டிரிய ஜனதா தளக் கட்சியின் நிறுவனத் தலைவர் சமூகநீதிப் போராளிலாலு பிரசாத் அவர்களுக்கு வாழ்த்துகளையும், அவரது உடல்நலத்தைப் பேணிட வேண்டும்’’ என்ற வேண்டுகோளையும் வாழ்த்துச் செய்தியில் தமிழர் தலைவர் ஆசிரியர் குறிப்பிட்டுள்ளார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *