பா.ஜ.க. ஆளும் உ.பி.யில் மோசடி

viduthalai
1 Min Read

லக்னோ, நவ. 10- பாஜக ஆளும் உத்தரப் பிரதேச மாநிலத்தில் பிரதமர் மோடியின் சொந்த தொகுதியான வாரணாசிக்கு உட்பட்டது ரமணா கிராம பஞ்சாயத்து. இந்த பஞ்சாயத்தின் மல்ஹியா பகுதியில் அங்கன்வாடி ஊழியர் சுமன்லதா என்பவர் ஆதார் அட்டைகளை – வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைப்ப தாக கூறி கிராமத்தினரிடம் விவரங்களை சேகரித்து உள்ளார்.

அதன்பிறகு ஒன்றிய அரசின் “போஷன் 2.0 அபியான் யோஜனா” திட்டத்தின் கீழ் சலுகை வழங்கப்படும் என அறிவித்து பணம் பறித்துள்ளார். மேலும் சேகரித்த விவரங்கள் மூலம் அங்கன்வாடி மய்யத்தில் 40 சிறுமிகளின் விவரங்களை கொடுத்தும், அவர்கள் கருவுற்று இருப்பதாகக் கூறியும் சலுகையை பெற்றதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில், போஷன் அபியான் யோஜனா திட்டத்தின் கீழ் அவர்களுக்கு வழங் கப்படும் சலுகைகள் குறித்து குழந்தை கள் மேம்பாட்டு அமைச் சகத்திடம் இருந்து 40 சிறுமிகளின் வீட்டிற்கு தகவல் சென்றுள்ளது. அதன்பிறகு தான் சுமன்லதாவின் மோசடி கள் அனைத்தும் வெளிச் சத்துக்கு வந்தன.

இதையடுத்து சிறுமியின் குடும்பத்தினர் பஞ்சாயத்து அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். உத்தரப்பிரதேச மாநில தலைமை வளர்ச்சி அதிகாரி ஹிமான்ஷு நாக்பால் விசார ணைக்கு உத்தரவிட்டுள்ளார்.

கருவுற்று இருப்பதாக கூறப்பட்டு “போஷன் 2.0 அபியான் யோஜனா” திட்டத்தில் பதிவு செய் யப்பட்ட 40 சிறுமிகளும் பள்ளி மாணவிகள் ஆவர். தற்போது மோசடி சம்பவம் வெளியே கசிந்ததும் 40 சிறுமிகளை இழிவுபடுத்தும் விதமாக ரமணா கிராம பஞ்சாயத்து முழுவதும் செய்திகள் வெளியாகியுள்ளன. இதனால் 40 சிறுமிகளின் பெற்றோர்கள் கண்ணீ ருடன் கவலையும் வேத னையும் கொண்டுள்ளனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *