பி.ஜே.பி. ஆட்சியில் ரயில் விபத்து அன்றாடக் கதை மேற்கு வங்கத்தில் பயணிகள் ரயில் கவிழ்ந்தது; 4 பெட்டிகள் தடம் புரண்டன!

1 Min Read

கொல்கத்தா, நவ.9 மேற்குவங்கத்தில் ஷாலிமர் எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டு விபத்து ஏற்பட்டது. 4 பெட்டிகள் தடம் புரண்டன. பயணிகளை அதிகாரிகள் பாதுகாப்பாக வெளி யேற்றினர்.

மேற்குவங்க மாநிலம் ஹவுரா அருகே நல்பூர் என்ற இடத்தில், செகந்திராபாத் – சாலிமார் எக்ஸ்பிரஸ் ரயில் வந்து கொண்டு இருந்தது. அப்போது 4 பெட்டிகள் தடம் புரண்டன. இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. ரயில்வே அதிகாரிகள் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். தடம் புரண்ட ரயில் பெட்டியில் இருந்து பயணிகளை அதிகாரிகள் பாதுகாப்பாக வெளியேற்றனர்.

மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. விபத்துக்கான காரணங்கள் குறித்து விசாரணை நடந்து வருகிறது. இந்த விபத்து காரணமாக அந்த வழித்தடத்தில் செல்லக்கூடிய ரயில்கள் தாமதமாக இயக்கப்படும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. இதனால் பயணிகள் கவலை அடைந்தனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *