மும்பை, நவ.9 பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் அவர்களின் 146 ஆவது பிறந்தநாள் விழா மும்பை திராவிடர் கழகத்தின் சார்பில் மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டது
17.09.2024 காலை 9 மணிக்கு தாராவி பகுதியில் உள்ள தந்தை பெரியார் சதுக்கத்தில் பெரியார் படத்தை வைத்து மாலை அணிவித்து தோழர்கள் சமூக நீதி நாள் உறுதி மொழியை எடுத்தனர் 100பேருக்கு இனிப்பு வழங்கி தோழர்கள் மகிழ்ந்தனர். ‘‘தந்தை பெரியார் வாழ்க! அன்னை மணியம்மையார் வாழ்க! புரட்சியாளர் அம்பேத்கர் வாழ்க!’’ என்று தோழர்கள் முழக்கமிட்டனர்!
மாலை 7 மணி அளவில் தாராவி கலைஞர் மாளிகையில் தந்தை பெரியார் பிறந்த நாள் விழா நிகழ்ச்சி தொடங்கியது. விழாவுக்கு மும்பை கழகத் தலைவர் பெ.கணேசன் தலைமை வைத்தார். முன்னதாக பெரியார் பிஞ்சு க.அறிவு மலர் கடவுள் மறுப்பு கூறினார். தொடர்ந்து மும்பை கழக செயலாளர் இ.அந்தோணி அனைவரையும் வர வேற்றார். விழா தலைவர் தனது உரையில், பெரியாருக்குப் பிறந்தநாள் கொண்டாடுவது என்பது பெரியாரால் நாம் பயன் பெற்றோம் என்ற நன்றி உணர்ச்சியின் வெளிப்பாடுதான் என்பதையும், பெரியாருக்கு நாம் என்றும் நன்றி உள்ளவர்களாக இருக்க வேண்டும் என்ற கருத்தை வலி யுறுத்தியும் பேசினார்.
அய்யா பிறந்தநாள் விழா கேக்கை, டாட்டா சமூக அறிவியல் பல்கலைக்கழக மாணவர் அநிந்தியா வெட்டி, எல்லோருக்கும் வழங்கினார். தொடர்ந்து கவிஞர் வ.இரா.தமிழ் நேசன், மனிதநேய இயக்கத்தைச் சார்ந்த சங்கர், திராவிடர் ஜெய் பீம் பவுண்டேஷன் தோழர் ராஜா குட்டி,மகிழ்ச்சி மகளிர் பேரவை தோழர் வனிதா இளங்கோவன், தோழர் வளர்மதி கணேசன், மும்பை கழகத் தோழர் பெரியார் பாலா, திராவிடர் கழக துணைச் செயலாளர் ஜே .வில்சன், மும்பை பகுத்தறிவாளர் கழகத் தலைவர் அ.இரவிச்சந்திரன் ஆகியோர் தந்தை பெரியார் அவர்க ளைப் பற்றியும், அவருடைய பிறந்தநாள் விழாவைபற்றியும் மிகச் சிறப்பாக உரையாற்றினர்.
மும்பை கழகப் பொருளாளர் அ.கண்ணன் நன்றி கூறினார்.
தந்தை பெரியார் அவர்களின் 146 ஆவது பிறந்தநாள் விழா மும்பை திராவிடர் கழகம் சார்பில் மும்பை தாராவி பகுதியில் உள்ள தந்தை பெரியார் சதுக்கத்தில் தந்தை பெரியாரின் படத்துக்கு மாலை அணிவித்துக் கொண்டாடப்பட்டது. தோழர்கள் அனைவரும் சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்றனர்!
இந்த நிகழ்வில் அய்.செல்வராஜ் க.அறிவுமதி, முலூண்ட் அ.பால சுப்ரமணியம், பூ.சு. அழகர்ராஜா, தொல்.காமராஜ், மகேந்திரன், அண்ணாமலை, வெண்ணிலா, சமூக அறிவியல் மாணவர்கள் வினித், ஜெயந்த், ரிஷப், தோழர் நித்தியானந்த் உள்பட பலர் கலந்துகொண்டனர்
ஆரிய பார்ப்பன பண்பாட்டுப்படை எடுப்புக்கு எதிராக அனைவருக்கும் மாட்டு இறைச்சி பிரியாணி வழங்கப்பட்டது!
நகரெங்கும் சுவரொட்டி
கழகத் தலைமை நிலையத்திலிருந்து அனுப்பி வைக்கப்பட்ட தந்தை பெரியார் பிறந்த நாள் சுவரொட்டிகள் மும்பை மாநகரத்தில் பல இடங்க ளில் தோழர்களால் சிறப்பாக ஒட்டப்பட்டன!