அகில இந்திய பிற்படுத்தப்பட்டோர் கூட்டமைப்பின் சார்பில் புதுடில்லியில் 10.8.2023 அன்று நாடாளுமன்ற வளாகத்தில் கான்ஸ்டிடியூஷன் கிளப் அவைத்தலைவர் அரங்கில் சமூக நீதி கருத்தரங்கம் நடைபெறுகிறது.
அக்கருத்தரங்கில் பங்கேற்றிட தேசிய பிற்படுத்தப்பட் டோர் ஆணையத் தலைவர் ஹன்ஸ்ராஜ் கங்காராம் அஹிர், உறுப்பினர் புவன் பூஷன் கமல் ஆகியோருக்கு அகில இந்திய பிற்படுத்தப்பட்டோர் கூட்டமைப்பு பொதுச் செயலாளர் கோ.கருணாநிதி நேற்று (27.7.2023) அழைப்பு விடுத்தார். கருத்தரங்கில் பங்கேற்றிட இருவரும் ஒப்புதல் அளித்தனர்.
மேலும், சென்னையில் 31.7.2023 அன்று கூட்டமைப்பின் பொறுப்பாளர்கள் கூட்டத்திலும் பங்கேற்பதற்கு தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத் தலைவர் ஹன்ஸ்ராஜ் கங்காராம் அஹிர் ஒப்புதல் அளித்தார்.
அதேபோன்று டில்லி கருத்தரங்கில் பங்கேற்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் கிரிதாரியாதவ் ஒப்புதல் அளித்தார்.
அகில இந்திய பிற்படுத்தப்பட்டோர் கூட்டமைப்பின் சார்பில் ஆக.10இல் டில்லியில் சமூக நீதி கருத்தரங்கம்
Leave a comment