கோவில் நகைகளைத் திருடிய பார்ப்பனர்

1 Min Read

கடந்த 3ஆம் தேதி சென்னையில் பார்ப்பனர்களால் விபீஷண கூட்டத்தின் மூலம் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் பேசிய நடிகை கஸ்தூரி ‘‘வெள்ளையா இருக்கிறவன் பொய் சொல்ல மாட்டான்னு சொன்னது வெள்ளக்காரங்கள் இல்லர் நம்ம அய்யர் அய்யங்கார்களத்தான்” ‘‘கருப்பா இருக்குறவங் களாம் அரசு வேலைக்கு போனதிலருந்துதான் ஊழல் பெருகிருச்சு!! அப்படின்னு வாய் கிழிய பேசுனாங்களே?’’ இப்ப இதுக்கு என்ன பதில் சொல்ல போறாங்க மிஸ் மெட்ராஸ் கஸ்தூரி?
6.11.2024 அன்று தினத்தந்தி நாளிதழில் இராமநாதபுரம் மாவட்டம் பகுதியில் வெளிவந்துள்ள செய்தி இதோ:
இராமநாதபுரம் அருகில் உள்ள பக்தர்களால் புண்ணிய தீர்த்தம் என்று கருதப்படும் திருப்புல்லாணி என்ற ஊரில் உள்ள ஆதி ஜெகநாதர் பெருமாள் கோவிலில் அந்த ஆலய ஸ்தானீகராக இருக்கும் சீனிவாச அய்யங்கார் என்பவரின் கைவரிசைதான் இது
ஆம்! 952 கிராம் எடை உள்ள 30 தங்க நகைகள், 1199 கிராம் எடையுள்ள 16 வெள்ளி நகைகளும் என ரூ.1 கோடி மதிப்பிலான நகைகள் மாயமாகியது என்று ஆலய ஸ்தானீகர் சீனிவாச அய்யங்கார் மீது அளித்த புகாரின் அடிப்படையில் கைது செய்ய நடவடிக்கை எடுத்த நிலையில் அவரே தாமாக முன்வந்து ராமநாதபுரம் நீதித்துறை நடுவர் எண் 2 பொறுப்பு நீதிபதி வெர்ஜின் வெஸ்டா முன்னிலையில் சரண் அடைந்துள்ளார். அவரை 15 நாள் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்ட நிலையில் தற்போது சிறைக் கம்பிகளை எண்ணிக் கொண்டு உள்ளார்.
சீனிவாச அய்யங்காருக்கு தெளிவாக தெரிந் திருக்கிறது “கடவுள் இல்லை!! சுடவுள் இல்லை! கடவுள் இல்லவே இல்லை! என்று! எங்கே பார்ப்போம்? கஸ்தூரிகளும், குருமூர்த்திகளும் என்ன பதில் சொல்லப் போகிறார்கள் என்று?
இதற்கு முட்டுக்கொடுக்கும் அடிமைகள் தான் முதலில் குதறுவார்கள் அதையும்
பார்க்கத் தான் போகிறோம்!!

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *