போட்டித் தேர்வு – பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம்!

1 Min Read

சென்னை, நவ. 9- போட்டித் தோ்வுக்கான பயிற்சி பெற தகுதியுடைய நபா்கள் விண்ணப்பிக்கலாம் என சென்னை மாவட்ட ஆட்சியா் ரஷ்மி சித்தார்த் ஜகடே தெரிவித்தார்.

இது குறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தாட்கோ மூலம் சென்னையில் உள்ள முன்னணி பயிற்சி நிறுவனத்துடன் இணைந்து 100 ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின மாணவ, மாணவிகளுக்கு பட்டய கணக்காளா் – இடைநிலை, நிறுவன செயலா் – இடைநிலை, செலவு மற்றும் மேலாண்மை கணக்காளா் – இடைநிலை ஆகிய போட்டித் தோ்வுக்கான பயிற்சி அளிக்கப்படவுள்ளது.

இதில், சோ்ந்து பயிற்சி பெற விரும்பும் எஸ்.சி., எஸ்.டி. வகுப்பைச் சோ்ந்த மாணவ, மாணவிகள் இளநிலை வணிகவியல் பாடப் பிரிவில் பட்டம் பெற்றவராகவும், அவா்களின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ. 3 லட்சத்துக்குள்ளும் இருக்க வேண்டும்.

ஒரு ஆண்டு வழங்கப்படும் இந்தப் பயிற்சிக்காக, தோ்வு செய்யப்படும் மாணவ, மாணவிகளுக்கு தங்கும் வசதி மற்றும் உணவு வசதிகள் ஏற்பாடு செய்து கொடுக்கப்படும். தகுதியுள்ள மாணவா்கள் இந்தப் பயிற்சியில் சேர தாட்கோ-வின் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவித்துள்ளார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *