வைகோ பெயர்த்தி மணவிழா : கழகப் பொதுச் செயலாளர் வீ. அன்புராஜ் வாழ்த்து தெரிவித்தார்

0 Min Read

இணையவழி கையெழுத்து இயக்கம்

திருவேற்காடு – ஜி.பி.என். மகாலில் நேற்று (6.11.2024) நடைபெற்ற மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளரும், திராவிட இயக்கத்தின் போர்வாளுமான நாடாளுமன்ற உறுப்பினர் வைகோ அவர்களின் பெயர்த்தியும், நாடாளுமன்ற உறுப்பினர் துரை வைகோவின் மகளுமான ரேணு – கோகுலகிருஷ்ணன் ஆகியோரது மணவிழா வரவேற்பு நிகழ்ச்சிக்கு திராவிடர் கழகப் பொதுச் செயலாளர்
வீ. அன்புராஜ் நேரில் சென்று வாழ்த்துகளை தெரிவித்தார். உடன்: பகுத்தறிவாளர் கழக மாநில தலைவர்
இரா. தமிழ்ச்செல்வன் – இன்று (7.11.2024) காலை திராவிடர் கழகத்தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் தொலைபேசியில் தொடர்பு கொண்டு இணையர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்தார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *