காற்று மாசு – வட மாநிலங்கள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்! – டில்லி அமைச்சர்

viduthalai
2 Min Read

புதுடில்லி, நவ. 7- காற்று மாசினைக் குறைக்க வட மாநிலங்கள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்று டில்லி சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கோபால் ராய் தெரி வித்தார்.

டில்லியில் தீபாவளி உள் ளிட்ட தொடர் நிகழ்வுகளை யொட்டி வருகிற ஜன. 1, 2025 வரை பட்டாசுகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

அனைத்து விதமான பட்டாசுகள் இருப்பு வைப்பது, விற்பது, பயன்படுத்துவது ஆகியவற்றுக்கு முழு தடை விதிக்கப்பட்டுள்ளது. எனினும் தீபாவளி அன்றும் அதற்கு மறுநாளும் (அக். 31, நவ. 1) டில்லியில் காற்றின் தரம் மிகவும் மோசமானது. தற்போது வரை அங்கு காற்றின் தரம் மோசமாகத் தான் இருக்கிறது.

இந்நிலையில் இது தொடர் பான வழக்கில், டில்லியில் பட்டாசுகளுக்கு விதிக்கப்பட்ட தடையை ஏன் சரியாக அமல்படுத்தவில்லை என்று உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பிய துடன் டில்லி அரசு இதுகுறித்து பதில் அளிக்க உத்தரவிட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து டில்லி சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கோபால் ராய் நேற்று (5.11.2024) அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். டில்லியில் காற்று மாசைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட குழுவுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

இதன்பின்னர் செய்தியாளர் களுடன் பேசிய அவர், ‘உத்தரப் பிரதேசம், அரியானா, ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் பாஜக ஆட்சி நடக்கிறது. இவர்களுக்கு அரசியல் செய்வதைத் தவிர வேறொன்றும் தெரியாது.

காற்று மாசினைக் குறைக்க வட மாநிலங்கள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். டில்லி அரசு இரவு, பகலாக வேலை செய்கிறது. மேற்குறிப்பிட்ட பாஜக மாநில அரசுகள் அமைதி காக்கின்றன. இது சரிசெய்யப்பட வேண்டும். அவர்கள் இந்த பொறுப்புகளில் இருந்து தப்பிக்க நினைக்கிறார்கள்.

கடந்த சில நாள்களாக டில்லியில் காற்றின் தரம் மிகவும் மோசமானப் பிரிவில் இருக்கிறது. சில பகுதிகளில் ‘கடுமை’ பிரிவில் இருக்கிறது. அடுத்த 10 நாள்கள் மிகவும் முக்கியமானவை. உத்தரப் பிரதேசத்தில் இருந்து வரும் கழிவு நீரால் யமுனை நதியில் நச்சு நுரை ஏற்பட்டுள்ளது. அதனை அகற்றும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்’ என்றார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *