பெண்களுக்கு மாதம் ரூ.3,000 மகாராட்டிர தேர்தல் அறிக்கையில் காங்கிரஸ் அளித்த அய்ந்து வாக்குறுதிகள்

1 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

மும்பை, நவ.7 மகாராட்டிராவில் ஆளும் கூட்டணி அரசையே மிஞ்சும் வகையில், காங்கிரஸ் தலைமையிலான மஹா விகாஸ் அகாடி கூட்டணி பெண்களுக்கு மாதம் ரூ.3000 வழங்குவது உள்ளிட்ட அய்ந்து வாக்குறுதிகளை அளித்துள்ளது.
288 சட்டமன்ற தொகுதிகளுடைய இங்கு, நவ., 20இல் ஒரே கட்டமாக தேர்தல் நடக்கிறது; நவ., 23இல் ஓட்டு எண்ணிக்கை நடக்கிறது.

இந்த தேர்தலில் ஆளும் மஹாயுதி கூட்டணிக்கும், எதிர்க்கட்சியான, உத்தவ் தாக்கரேயின் சிவசேனா – காங்., – சரத் பவாரின் தேசியவாத காங்., அடங்கிய, மஹா விகாஸ் அகாடி கூட்டணிக்கும் இடையே பலத்த போட்டி நிலவுகிறது.
காங்கிரஸ் அய்ந்து வாக்குறுதிகளை அளித்து உள்ளது.

1. மாநிலத்தில் பெண்களுக்கு மாதம் ரூ.3,000 அளிக்கப்படும். மற்றும் மஹாலட்சுமி யோஜனா திட்டத்தின் கீழ் அரசுப் பேருந்துகளில் பெண்களுக்கு இலவசப் பயணம் .

2. கிருஷி சம்ருத்தி யோஜனா திட்டத்தின் கீழ், விவசாயிகள் பயிர்க் கடன் ரூ. 3 லட்சம் தள்ளுபடி செய்யப்படும். முறையாக கடனை திருப்பிச் செலுத்தியர்களுக்கு ஊக்கத் தொகையாக 50,000 ரூபாய் வழங்கப் படும்.

3. ஜாதி வாரியாக மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தி, 50 சதவீத இடஒதுக்கீடு வரம்பை நீக்க பாடுபடுவது.

4. ரூ.25 லட்சம் வரையிலான மருத்துவக் காப்பீடு மற்றும் இலவச மருத்துவம் வழங்கப்படும்.

5. வேலையில்லாத இளைஞர் களுக்கு மாதம் ரூ.4,000உதவித்தொகை. என அறிவித்து உள்ளது.
தொடர்ந்து ராகுல் பேசுகையில், இது சித்தாந்தத்தின் போர், ஒருபுறம் பா.ஜ., மற்றும் ஆர்.எஸ்.எஸ். உள்ளது, மறுபுறம் இந்தியா கூட்டணி உள்ளது, ஒருபுறம், அம்பேத்கரின் அரசமைப்பு, சமத்துவம் உள்ளது. மற்றும் அன்பு மற்றும் மரியாதையும் இருக்கிறது. மறுபுறம், பா.ஜ., மற்றும் ஆர்.எஸ்.எஸ். ஆகியவை அரசமைப்பை ஒழிக்க முயற்சிக்கின்றன.
பணவீக்கம் மற்றும் வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரிப்பால் மக்கள் அவதி அடைந்துள்ளனர். இவ்வாறு ராகுல் பேசினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *