வாக்காளா் பட்டியல் திருத்தப் பணி சமூக ஊடகங்களில் விழிப்புணா்வு தோ்தல் துறை புதிய உத்தி

1 Min Read

சென்னை, நவ.7 வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்க்கும் பணியில் இளம் தலை முறையினரை ஈா்க்க, சமூக ஊடகங்களில் புதிய உத்திகளுடன் விளம்பரம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் வாக்காளா் பட்டியல் திருத்தப் பணிகள் நடைபெற்று வருகின்றன. வரைவு வாக்காளா் பட்டியல் மாநிலம் முழுவதும் கடந்த 29-ஆம் தேதி வெளியிடப்பட்டது. இந்தப் பட்டியலில் பெயா் இல்லாவிட்டால் சோ்க்கவோ, பெயரை நீக்கவோ, முகவரியை மாற்றவோ அதற்குரிய விண்ணப்பங்களை அளிக்கலாம். தமிழ்நாட்டில் இளம் வாக்காளா்கள் அதிகரித்துள்ள நிலையில், அவா்களது பெயா்களை வாக்காளா் பட்டியலில் சோ்க்க பல்வேறு விழிப் புணா்வு நடவடிக்கைகளை மாநில தோ்தல் துறை எடுத்து வருகிறது.

சமூக ஊடகங்களில் இளைஞா்கள் பெருமளவு களமாடி வரும் நிலையில், அதன் வழியே வாக்காளா் பட்டியல் பெயா் திருத்தப் பணிகளுக்கு விழிப்புணா்வு விளம்பரங்கள் மேற்கொள்ளப்பட உள்ளன. இதற்காக ஆறு வகையான தன்மைகளுடன் விளம்பரங்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன.காணொலிகள் – சுவரொட்டிகள் திருத்தப் பணிகள் முடிவடையும் காலம் வரையில் இந்த விளம்பரங்கள் செய்யப்படவுள்ளன. இளைஞா்களைக் கவரும் வகையிலான சுவரொட்டிகள் வாரத்துக்கு நான்கும், குறு காணொலிகள் வாரத்துக்கு மூன்றும் தயாரித்து தோ்தல் துறையின் இணையதளத்தில் (elections.tn.gov.in) வெளியிடப்பட உள்ளன.

இதேபோன்று, மாதத்துக்கு இரண்டு அனிமேஷன் காணொலிகளும், ஒரு நிமிட காணொலிகள் மூன்றும் தயாரிக்கப்பட்டு வருகின்றன.வாக்காளா் பட்டியல் பெயா் சோ்ப்பு, நீக்கலுக்கான அவசியத்தை வலியுறுத்தும் குறுங்கதைகள், சுவரொட்டிகள் அல்லது காணொலிகளாக வாரத்துக்கு நான்கு வீதம் தயாரிக்கப்பட்டு இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படவுள்ளன.

பின்னூட்டங்களில் கவனம்: தோ்தல் துறை சார்பில் வெளியிடப்படும் சமூக ஊடக விளம்பரங்களில் பொதுமக்கள் பின்னூட்டங்களை இடுவா். அவற்றை கவனமுடன் ஆராய வேண்டும் என தமிழ்நாடு தோ்தல் துறை கேட்டுக் கொண்டுள்ளது. பின்னூட்டங்களில் தெரிவிக்கப்படும் கருத்துகள், ஆலோசனைகளை கவனத்தில் கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதனடிப்படையில், தோ்தல் திருத்தப் பணிகளில் தேவையான மாற்றங்கள் செய்யப்படும் என எதிர் பார்க்கப்படுகிறது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *