ஒன்றிய அமைச்சர் குமாரசாமி மீது வழக்கு

2 Min Read

பெங்களூரு, நவ.7- லோக் அயுக்தா கூடுதல் காவல்துறை இயக்குநர் அளித்த புகாரின்பேரில் ஒன்றிய அமைச்சர் குமாரசாமி, அவ ரது மகன் உள்பட 3 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

கருநாடக மேனாள் முதல மைச்சர் குமாரசாமி. மேனாள் பிரதமர் தேவேகவுடாவின் மகனான இவர் தற்போது ஜனதாதளம் (எஸ்) கட்சியின் தலைவராக உள்ளார். மேலும் குமார சாமி ஒன்றிய கனரக தொழில் மற்றும் உருக்கு துறை அமைச்சராகவும் உள்ளார். கடந்த 2006-ஆம் ஆண்டு முதல் 2008-ஆம் ஆண்டு வரை குமாரசாமி முதலமைச்சராக இருந்தபோது, பல்லாரியை சேர்ந்த சிறீசாய் வெங்கடேஷ்வரா மினரல்ஸ் நிறுவனத்திற்கு சட்டவிரோதமாக சுரங்கம் நடத்த அனுமதி வழங் கியதாக குற்றச்சாட்டு எழுந்தது.

சிறப்பு புலனாய்வு குழு விசாரணை

இதுகுறித்த புகாரின்பேரில் கருநாடக அரசுலோக்அயுக்தா வின் சிறப்பு புலனாய்வு குழு (எஸ்.அய்.டி.) விசாரணைக்கு உத்தரவிட்டது. இந்த விசாரணை குழுவின் தலைவராக காவல்துறை கூடுதல் காவல்துறை இயக்குநர் சந்திரசேகர் நியமிக்கப்பட்டார். அவர் தலைமையில் இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. இதற்கிடையே முதலமைச்சர் சித்தராமையா மீதான நில முறைகேடு வழக்கு பெரிதானதால், இந்த வழக்கை கருநாடக அரசு தூசி தட்டி விசாரிக்க முடிவு செய்தது.

இதற்கிடையே தன்னை பணி செய்யவிடாமல் மிரட்டுவதாக ஒன்றிய அமைச்சர் குமாரசாமி, அவரது மகன் நிகில் குமாரசாமி, சட்டமன்ற ஜன தாதளம் (எஸ்) கட்சி தலைவர் சுரேஷ் பாபு ஆகியோர் மீது கூடுதல் காவல்துறை இயக்குநர் சந் திரசேகர் சஞ்சய் நகர் காவல்துறையில் பரபரப்பு புகார் அளித்தார்.
குமாரசாமி ஒன்றிய அமைச்ச ராக இருப்பதால், அவர் மீது வழக்குப்ப திவு செய்ய அனுமதி கேட்டு சஞ்சய் நகர் காவல் துறையினர் பெங்களூரு 42-ஆவது கூடுதல் மெட்ரோ பாலிட்டன் மாஜிஸ்திரேட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

இந்த மனு நீதிபதி முன் னிலையில் விசாரணைக்கு வந் தது. இரு தரப்பு வாதங்களை யும் கேட்ட நீதிபதி,கூடுதல் டி.ஜி.பி. சந்திரசேகரின் புகா ரின்பேரில் ஒன்றிய அமைச்சர் குமா ரசாமி, நிகில் குமாரசாமி. சுரேஷ்பாபு ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்ய காவல்துறையினருக்கு அனுமதி வழங்கி உத் தரவிட்டார்.

குமாரசாமி மீது வழக்குப்பதிவு

இதையடுத்து சஞ்சய்நகர் காவல்துறையினர் ஒன்றிய அமைச்சர் குமாரசாமி, அவரது மகன் நிகில் குமாரசாமி, சட்ட மன்ற ஜன தாதளம் (எஸ்) கட்சி தலைவர் சுரேஷ் பாபு ஆகியோர் மீது பி.என்.எஸ். 224-ஆவது பிரிவின் கீழ் மிரட்டல் விடுப்பதாகவழக் குப்பதிவு செய்துள்ளனர்.
இதனால் குமாரசாமிக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. மேலும் இந்த விவகாரம் கர்நாடக அரசியலில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *