யுஜிசி பெயரை தவறாக பயன்படுத்தினால் நடவடிக்கை

Viduthalai
1 Min Read

புதுடில்லி, நவ.4 பல்கலைக்கழக மானியக் குழுவின் பெயரை தவறாகப் பயன்படுத்துவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) செயலா் மனீஷ் ஆா்.ஜோஷி வெளியிட்ட அறிவிப்பு:
உரிய அனுமதி, அங்கீகாரம் பெறாமல் யுஜிசி-இன் இலச்சினையை பல்வேறு நிறுவனங்கள் பயன்படுத்தி வருவது கவனத்துக்கு வந்துள்ளது. இதுபோன்ற நடவடிக்கைகள் பல் வேறு குழப்பத்துக்கு வழிவகுக்கிறது. யுஜிசி-இன் பெயா், இலச்சினை மற்றும் இணையதளத்தை பயன் படுத்த எவருக்கும் அனுமதி வழங்கவில்லை. இருந்தபோதிலும், சில தனியார் நிறுவனங்கள் யுஜிசி-இன் விவரங்களை தவறான ஆதாயங்களுக்காக பயன்படுத்து கின்றனா். எனவே, பொதுமக்கள் உள்பட அனைவரும் இது குறித்து எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். அந்த விவரங்களைத் தவறாகப் பயன்படுத்துவோர் மீது உரிய நட வடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *