‘புண்ணிய’ நதியாம்!

Viduthalai
1 Min Read

யமுனை ஆற்றில் மிதக்கும் நச்சு நுரை! மக்கள் பெரும் அவதி

புதுடில்லி, நவ.3 யமுனை ஆற்றில் மிதக்கும் நச்சு நுரை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் மக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர்.
டில்லியில் மாசு பாட்டால் யமுனை நதியில் கடந்த சில வாரங்களாகவே நச்சு நுரை காணப்படுகிறது. வெள்ளை நிற பனிப் படலம்போல் யமுனை ஆற்றின் மேல் நச்சு நுரை மிதக்கிறது. தொழிற்சாலைகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுகளால் இந்த நச்சு நுரை உருவாகியுள்ளதாகக் கூறப்படுகிறது. உத்தரப்பிரதேசம், அரியானா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து வெளியேறும் கழிவுகள்தான் காரணம் என்று ஆம் ஆத்மி கட்சி குற்றம் சாட்டுகிறது. அதேநேரத்தில் யமுனை நதியைக் காக்க ஆம் ஆத்மி அரசு தவறிவிட்டது என பா.ஜ.க. குற்றம்சாட்டுகிறது.
நச்சு நுரையால் யமுனை ஆற்றின் நீரை பயன்படுத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ள தாகவும், உடல் ரீதியான பிரச்சினைகள் ஏற்படுவதாகவும் பொதுமக்கள் கவலை தெரிவித்துள்ளனர். யமுனையில் அம்மோனியா மற்றும் பாஸ்பேட் வேதி பொருள்கள் அதிகம் உள்ளன. இது, பொதுமக்களுக்கு சுவாசம் மற்றும் தோல் பிரச்சினைகள் உள்பட கடுமையான உடல்நல அபாயங்களை ஏற்படுத்துகின்றன. இயந்திரப் படகு மற்றும் நவீன இயந்திரங்கள் உதவியுடன் நுரையை அகற்றும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. நுரையை மட்டுப்படுத்தும் ரசாயனங்கள் பயன்படுத்தப்படுகின்றன.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *