ஒரே நாடு, ஒரே தேர்தல் சாத்தியமற்றது மல்லிகார்ஜுன கார்கே!

1 Min Read

புதுடில்லி, நவ.1 காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ஒரே நாடு, ஒரே தேர்தல் முறை சாத்தியமற்றது என்றும், நாடாளுமன்றத்தில் ஒருமித்த கருத்து இல்லாமல் இதனை நடைமுறைப்படுத்த முடியாது என்று பேசியுள்ளார்.
சர்தார் வல்லபாய் படேலின் பிறந்தநாளையொட்டி நர்மதை நதிக்கரையில் அவரின் உருவச் சிலை அமைந்துள்ள குஜராத் மாநிலம் கேவாடியா பகுதியில் விமானப் படை சாகச நிகழ்ச்சி நடைபெற்றது.

அங்கு பேசிய பிரதமர் மோடி, “இந்திய ஜனநாயகத்தை வலுப்படுத்தும் விதமாக ஒரே நாடு ஒரே தேர்தல் முறையைக் கொண்டு வருவதற்காக நாங்கள் உழைத்து வருகிறோம். இன்று இந்தியா பொது சிவில் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதை நோக்கி நகர்ந்துகொண்டு வருகிறது.

இந்தியாவின் ஜனநாயகத்தை வலுப்படுத்தும், இந்தியாவின் வளங்களின் உகந்த விளைவைக் கொடுக்கும், வளர்ந்த இந்தியா என்ற கனவை அடைவதில் நாடு புதிய வேகத்தைப் பெறும், ஒரே நாடு ஒரே தேர்தலை நோக்கி நாங்கள் இப்போது செயல்பட்டு வருகிறோம். இன்று, இந்தியா ஒரு நாடு ஒரே சிவில் கோட் என்ற மதச்சார்பற்ற சிவில் கோட் நோக்கி நகர்கிறது. முன்பு நாடு முழுக்க வேறு வேறு வரி செலுத்தும் முறைகள் இருந்தன. ஆனால், பாஜக தலைமையிலான பாஜக அரசுஒரே நாடு ஒரே வரி என்ற முறையில் ஜிஎஸ்டியை அறிமுகப்படுத்தியது” என்று பேசினார்.

இதை தொடர்ந்து, செய்தி யாளர்களுடன் பேசிய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, “பிரதமர் மோடி அவர் சொல்வதை செய்ய மாட்டார். ஏனென்றால், நாடாளுமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பில் அனைவரின் கருத்தும் ஒன்றாக இருந்தால் மட்டுமே இது சாத்தியம்.அந்த வகையில், ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ என்பது சாத்தியமற்றது” என்று தெரிவித்துள்ளார். கடந்த செப். 18 அன்று ஒன்றிய அமைச்சரவை ஒன்றிய அரசின் ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டத்திற்கு ஒப்புதல் அளித்தது குறிப்பிடத்தக்கது. மேனாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையிலான உயர்நிலைக் குழு அறிக்கையில் இந்தப் பரிந்துரைகள் செய்யப் பட்டுள்ளன.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *