இதுதான் பிஜேபி அரசு! பா.ஜ.க. ஆளும் உ.பி.,யில் ரூ.100 கோடி மதிப்பில் போதைப்பொருள் பறிமுதல்

1 Min Read

நொய்டா, நவ. 1- பாஜக ஆளும் உ.பி.,யில் ரூ.100 கோடி மதிப்பில் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
மோடி பிரதமர் ஆன பின்பு நாட்டில் போதைப் பொருள் உற்பத்தி, கடத்தல், விற்பனை மிக மோசமான அளவில் அதி கரித்துள்ளது. குறிப்பாக பாஜக ஆளும் மாநிலங்கள் போதைப் பொருள் பயன்பாட்டுக் கூடாரமாக உள்ளன.

இந்நிலையில், பாஜக ஆளும் உத்தரப்பிரதேச மாநிலத்தின் முக்கிய நகரான கிரேட்டர் நொய்டாவுக்கு அருகே உள்ள கவுதம புத்தா நகரின் கசானா தொழிற்பேட்டை யில் இயங்கி வந்த ரசாயன தொழிற்சாலையின் ஆய்வகத்தில் போதைப் பொருள் தயாரிக்க பயன்படுத்தப்படும் மெத்தம்பேட்டமைன் என அழைக்கப்படும் வேதிப்பொருளை தேசிய போதைப்பொருள் கட்டுப்பாட்டு ஆணைய அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

கைப்பற்றப்பட்ட 95 கிலோ மதிப்புள்ள மெத்தம்பேட்டமைனின் மதிப்பு ரூ.100 கோடி என செய்திகள் வெளியாகியுள்ளன. மெத்தம்பேட்டமைன் தயாரிப்பு ஆய்வகத்தை நடத்தி வந்த 4 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களில் ஒருவர் டில்லி திகார் சிறை கண்காணிப்பாளர் என தெரிய வந்துள்ளது. மற்றொருவர் டில்லியைச் சேர்ந்த தொழிலதிபர். மற்ற இருவரும் மும்பையைச் சேர்ந்த வேதியியலாளர் மற்றும் மெக்சிகோவைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல் குழுவைச் சேர்ந்தவர்கள் என செய்திகள் வெளியாகியுள்ளன.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *