டில்லியில் 3 முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர் பாஜகவிலிருந்து வெளியேறினார்

viduthalai
1 Min Read

புதுடில்லி, நவ.1- 70 தொகுதிகளை கொண்ட டில்லி சட்டமன்றத்திற்கு அடுத்த ஆண்டு(2025) பிப்ரவரி மாதம் தேர்தல் நடைபெற உள்ளது. டில்லி சட்டர்பூர் தொகுதி பா.ஜனதா முன்னாள் எம்.எல்.ஏ.வான பிரம் சிங் தன்வார் தனது ஆதரவாளர்களுடன் நேற்று (31.10.2024) ஆம் ஆத்மி கட்சியின் தலைமை அலுவலகத்தில், அக்கட்சி தலைவரும், மேனாள் முதலமைச்சருமான அரவிந்த் கெஜ்ரிவால் முன்னிலையில் இணைந்தார்.

இதுபற்றி பிரம்சிங் தன்வார் கூறுகையில், கெஜ்ரிவாலின் அரசியல் நடை, செயல்பாடுகள் என்னை கவர்ந்துள்ளது. அதனால் நான் ஆம் ஆத்மி கட்சியில் சேர்ந்துள்ளேன். முழு ஈடுபாட்டுடன் மக்கள் பணியாற்றுவேன் என்றார். பிரம்சிங் தன்வார் தொடர்ந்து 3 முறை எம்.எல்.ஏ.வாக இருந்துள்ளார். வருகிற சட்டசபை தேர் தலை அவர் தலைமையில் சந்திக்க பா.ஜனதா மேலிடம் முடிவு செய்திருந்தது. இந்நிலையில் அவர் பா.ஜனதாவில் இருந்து விலகி ஆம் ஆத்மி கட்சியில் சேர்ந்தது, டில்லி பா.ஜனதாவினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *