ஜெய் சிறீராம் முழக்கத்தை திணிக்கும் அவலம் ‘ஜெய் சிறீராம்’ சொல்ல மறுத்த பெண்ணுக்கு உணவு தர மறுப்பு

1 Min Read

மும்பை, நவ.1- மும்பையில் உள்ள டாட்டா மருத்துவமனையின் வெளியே NGO-வை சேர்ந்தவர்கள் இலவசமாக நோயாளிகளுக்கும் அவருடன் இருக்கும் உறவினர்களுக்கும் உணவு வழங்கியுள்ளனர். இதற்காக நீண்ட வரிசை ஒன்று நின்றுள்ளது.
அதில் ஹிஜாப் அணிந்த பெண் ஒருவரும் வரிசையில் நின்றுள்ளார். பின்னர் அந்தப் பெண் உணவு வழங்கும் இடத்துக்கு வந்ததும் அவரைப் பார்த்து, உணவு வழங்குபவர் ‘ஜெய் சிறீராம்’ என்று சொன்னால்தான் உணவு தருவோம் என்று கூறியுள்ளார்.

இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த அந்த பெண் அப்படி உச்சரிக்க மறுத்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த உணவு வழங்குபவர் உணவு வழங்க முடியாது என்று கூறி, வரிசையில் இருந்து நகர்ந்து செல்லுமாறு அந்த பெண்ணை விரட்டி உள்ளார்.
இது குறித்த காட்சிப் பதிவு தற்போது வெளியாகியுள்ள நிலையில், பலரும் அந்த நபருக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். பாஜக தொடர்ந்து செயல்படுத்தி வரும் இந்துத்துவம் பாமர மக்களிடையேயும் ஊடுருவியுள்ளது வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *