410 முறை வெடிகுண்டு மிரட்டல்! இண்டர்போலிடம் உதவி கேட்கும் இந்தியா!

1 Min Read

மும்பை, நவ.1 இந்திய விமா னங்கள் மீது தொடர் வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்பட்டு வருவ தால் பன்னாட்டு காவல்துறையினர் உதவியை இந்தியா நாடியுள்ளது.
இந்தியாவில் விமானங்கள் மற்றும் விமான நிலையங்களுக்கு சமூக வலைதளங்கள் மூலம் அடிக்கடி வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்பட்டு வரும் நிகழ்வுகள் தொடா்ந்து நடைபெற்று வருகிறது. இதன்படி, கடந்த 2 வாரங்களில் 410க்கும் மேற்பட்ட உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப் பட்டுள்ளது. சென்னை விமான நிலையத்துக்கும் தொடா்ந்து வெடி குண்டு மிரட்டல்கள் வந்த வண்ணம் உள்ளன.
இதனால், அடிக்கடி விமானங்கள் சோதனையிடப்படுவதால் மிகப் பெரிய அளவில் பொருளாதார இழப்பும் ஏற்பட்டு வருகின்றது. இந்த நிலையில், இந்திய விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்கள் விடுப்பவர்களைப் பற்றி அறிய இந்திய அரசு பன்னாட்டு குற்ற விசாரணை அமைப்பான இண்டர்போலின் உதவியை நாடியுள்ளது.
மேலும், விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்களை விடுபவர்களின் தொலைப்பேசி எண் மற்றும் இமெயில் கணக்கை திரட்டி தருமாறு அமெரிக்காவின் எப்பிஅய் (FBI) விசாரணை அமைப்பிடம் இந்திய அரசு உதவி கேட்டுள்ளதாம். இதற்கு, எப்பிஅய் சம்மதம் தெரிவித்ததாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *