லண்டன், ஜூலை 29- பிரிட்டனை மய்யமாகக் கொண்டு செயல்ப டும் இந்திய வம்சாவளி பெண்கள் குழு மணிப்பூர் வன்முறைக்கு எதிராக அமைதி வழிப் போராட்ட பேரணியை மேற்கொண்டனர். அமைதி வழிப் பேரணியை வெளிப்படுத்தும் விதமாக இந்தக் குழுவினர் முகக் கவசம் அணிந்து பேரணியில் கலந்து கொண்டனர்.
லண்டனில் உள்ள இந்தியத் தூதரகம் முன்பு பதாகைகளை ஏந்தி நின்ற இந்தக் குழு பின்னர் அங்கிருந்து நாடாளுமன்ற வளாகத்துக்கு எதிராக உள்ள காந்தியாரின் சிலைநோக்கிச்சென்று தங்களது இந்த அமைதியான பேரணியை முடித்துக் கொண் டனர். இந்த அமைதி வழிப் போராட்டம் தொடர்பாக இந்திய வம்சாவளி பெண்கள் குழு தரப்பில் கூறியதாவது:
மணிப்பூரில் இரண்டு குகி இன சகோதரிகளை நிர்வாணமாக்கி ஊர்வலமாக அழைத்துச் செல்லப் பட்டு கூட்டுப் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப் பட்டதற்கு எதிராக இந்த அமைதி வழிப் பேரணியை நாங்கள் நடத்தியுள்ளோம். அந்த சகோதரிகளுடன் நாங்கள் உறுதியாக துணை நிற்கிறோம் எனக் கூறினர்.