கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்

1 Min Read

31.10.2024
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
* ஒன்றிய அரசின் தவறான செயல்பாட்டால் நாட்டின் பொருளாதார வளர்ச்சி கடும் வீழ்ச்சி: தொழிலாளர்களின் வருவாயில் தேக்கநிலை, ஏற்றத்தாழ்வு, பணவீக்கம் அதிகரிப்பு போன்ற பிரச்சினைகளால் வருங்காலத்தில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி பெருமளவு வீழ்ச்சி அடைவ தற்கான அறிகுறிகள் தென்படுகின்றன. காங்கிரஸ் எச்சரிக்கை
தி ஹிந்து:
* மகாராட்டிரா ஷிண்டே – பாஜக கூட்டணி ஆட்சியில், அவர்கள் 2019இல் தந்த தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்படவில்லை என மும்பையை தளமாகக் கொண்ட சிவில் சொசைட்டி ஆய்வில் வெளிப்படுத்தியுள்ளது.
டைம்ஸ் ஆப் இந்தியா:
* தெலங்கானா ஜாதிவாரி சர்வேக்கு 7 நாட்களில் சிறப்பு குழு அமைக்க வேண்டும்: உயர்நீதிமன்றம் உத்தரவு. தற்போதுள்ள ஆணையம் கணக்கெடுப்புக்கு ஈடுபடுத்தப்பட்டுள்ளதால், நவம்பர் 6ஆம் தேதி முதல் கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

குடந்தை கருணா

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *