பொருளாதார நிலையில் பெரும் ஆபத்தில் சிக்கி இருக்கும் இந்தியா காங்கிரஸ் குற்றச்சாட்டு

2 Min Read

புதுடில்லி,அக்.31- இந்தியா மிகவும் ஆபத்தான, கடினமான பொருளாதார நிலை யில் இருக்கிறது. இதில் தீவிர கவனம் செலுத் தாவிட்டால், வரும் ஆண்டு களில் வளர்ச்சி பாதிக் கப்படும் என்று காங்கிரஸ் கட்சி கூறியுள்ளது.

காங்கிரஸ் கட்சி பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

30 ஆண்டுகளாக இந்தியாவின் வளர்ச்சி பயணம், நுகர்வு வளர்ச் சியில் ஒன்றாக இருந்தது. கோடிக் கணக்கான குடும்பங்கள், ஏழ்மையில் இருந்து விடுபட்டு, நடுத்தர வகுப்பில் நுழைந்தன. பொருட்களையும், சொத் துகளையும் வாங்கும் நிலைக்கு முன்னேறின. இது, செழிப்பான பொருளாதாரத்தின் அறி குறி. ஆனால், கடந்த 10 ஆண்டுகளாக இந்தியாவின் நுகர்வு பயணம், பின்னோக்கி சென்று கொண்டிருக்கிறது. இந்தியாவின் நடுத்தர வகுப்பு சுருங்கி வருவதாக முன்னணி நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி தெரிவித்துள்ளார் .

ஊதிய தேக்கம், அதிக பண வீக்கம், சமத்துவம் இன்மை ஆகியவைதான் அதற்கான காரணங்கள்.

தொழிலாளர்கள் 10 ஆண்டுகளுக்கு முன்புவாங்க முடிந்ததை விட தற்போது குறை வாகவே வாங்க முடிவ தாக ஒன்றிய அரசின் புள்ளிவிவரங்கள் கூட தெரிவிக்கின்றன. குடும்பங் களுக்கு கூடுதல் வருவாய் குறைந்து விட்டதால், அவர்களால் பொருட்களை வாங்க செலவழிக்க முடிய வில்லை. கடந்த 10 ஆண்டுகளில், அதானி குழுமம் உள்பட 5 பெரிய தொழில் குழுமங்கள் தான் பெரிதாக உருவெடுத்ததாக ரிசர்வ் வங்கி மேனாள் துணை ஆளுநர் விரால் ஆச்சார்யா தெரிவித்துள்ளார். கடந்த 2015ஆம் ஆண்டு, ஒரு சாமானியன் ரூ.100 மதிப்புள்ள பொருட்கள் வாங்கினால், தொழிற்சாலையின் உரிமையாளருக்கு 18 சதவீதத்தை செலுத்தி வந்தான். ஆனால், இப்போது அதே உரிமை யாளருக்கு 36 சதவீதம் செலுத்த வேண்டி உள்ளது.

இந்த நிறுவனங்களுக்கு ஆதரவான ஒன்றிய அரசின் நிலைப்பாடுதான், விலைவாசி உயர்வுக்கு நேரடி காரணம். இந்த விலைஉயர்வால், சாமானி யர்களின் வாங்கும் சக்தி குறைந்து விட்டது.

கரோனாவில் இருந்து மீண்ட பிறகு நாட்டின் கிராமப்புற மக்களும், ஏழைகளும் கைவிடப்பட்டனர். அதனால் சமத்துவம் இன்மை நிலவி வருகிறது. கிராமங்களில் இரு சக்கர வாகனங்கள் விற்பனை, 2018ஆம் ஆண்டில் இருந்ததை விட குறைவாக இருக்கிறது.

“தங்களது தயாரிப்பு களின் விற்பனையில் போதிய வளர்ச்சி இல்லாவிட்டால், இந்தியா வின் தனியார்துறை, புதிய தயாரிப்புகளில் முதலீடு செய்யாது. இந்தியா மிகவும் ஆபத்தான, கடினமான பொருளாதார நிலையில் இருக்கிறது. ஊதிய தேக்கம், பணவீக்கம், சமத்துவம் இன்மை ஆகியவை அரசியல் பிரச்சினைகள் மட்டுமல்ல. அவை இந் தியாவின் நீண்ட கால வளர்ச்சியை அரித்து விடும். இப்போதாவது தீவிர கவனம் செலுத் தாவிட்டால், இந்த தடைக்கற்கள், வரும் ஆண்டுகளில் இந்தியா வின் வளர்ச்சியை பாதிக் கும்.

இவ்வாறு அவர் கூறி யுள்ளார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *